Advertisment

என்ஐஏ அதிகாரிகள் என்று கூறி பாஜக நிர்வாகி கைவரிசை

burma bazaar issue in chennai six peoples surrender

ராமநாதபுரம்மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவர்சென்னையில் உள்ள பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் இவரது வீட்டிற்கும், கடைக்கும்சென்ற 6 மர்ம நபர்கள்தங்களை என்ஐஏ அதிகாரிகள் என்று கூறிஅவரது கடையிலும்வீட்டிலும்என 20 லட்சம்ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஇருந்தது.

Advertisment

தனது வீட்டிற்கும், கடைக்கும்வந்தவர்கள் உண்மையான என்ஐஏ அதிகாரிகள் இல்லை என்பதும், தான் பணத்தை இழந்ததை அறிந்த அப்துல்லா இதுகுறித்துமுத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து காவல் உதவி ஆணையர் வீரகுமார்தலைமையில் தனிப்படை அமைத்து பணத்தைப் பறித்துச் சென்றவர்கள் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisment

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 6 பேர் சரணடைந்தனர். இவர்களில் பாஜகவைசேர்ந்த வடசென்னை பகுதி நிர்வாகி வேலு என்கிற வேங்கை மாறன் என்பதும் அவரது கூட்டாளிகளானரவி, விஜயகுமார், தேவராஜ், புஷ்பராஜ், கார்த்திக்ஆகிய ஆறு பேரையும்போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் இவ்வழக்கு தொடர்பான முழு விவரம்தெரிய வரும் என்றனர்.

Chennai NIA
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe