Skip to main content

அடக்கம் செய்யப்பட்ட பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Buried woman comes back alive causing stir

 

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் ரயில் மோதி இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி பகுதியில் சந்திரா என்ற பெண், மகனின் பராமரிப்பில் உள்ளார். இவருக்கு வயது 72. இவர் அடிக்கடி சிங்கப்பெருமாள் கோவிலுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு செல்வதாகக் கூறி சென்றுள்ளார்.

 

அவர் கோவிலுக்குச் செல்வதாக சொல்லிச் சென்ற சிறிது நேரத்தில் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. ரயில் மோதி இறந்ததாக சொல்லப்பட்டது. இறந்தவர் சந்திராவை போல் இருந்ததால் ஊர்மக்களும் உறவினர்களும் சந்திரா தான் இறந்து விட்டதாக நினைத்து உடலைப் பெற்று அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் புதன் கிழமை காலை சந்திரா கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இறந்தவர் உயிருடன் வந்ததாக நினைத்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சந்திராவின் உடல் எனக் கருதி யாருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.