Skip to main content

மார்பளவு தண்ணீரில் சென்றால்தான் உடல் அடக்கம்... தவிக்கும் கிராமம்!  

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்காவுக்கு உட்பட்டது சேர்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால் அங்குள்ள ஆற்றை கடந்து உடலை எடுத்து சென்று ஆற்றின் ஓரம் எரிக்கவோ, புதைக்கவோ முடியும். மழைக்காலங்களில் ஆற்றை கடந்து சுடுகாட்டுக்கு செல்வதில் சிரமம் இருந்து வருகிறது.

buried incident in vellore


இதனால் ஆற்றை கடக்க ஒரு சிறுப்பாலம் கட்டித்தர வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த கிராம மக்கள் அரசுக்கு பலப்பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் எம்.எல்.ஏ, எம்.பி என முறையிட்டும் யாரும் அதற்காக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் மழைக்காலங்களில் யாராவது இறந்துவிட்டால் அந்த உடலை ஆற்றில் இறங்கி கொண்டு செல்லும்போது நெஞ்சுவரை தண்ணீரில் மிதந்தனர். அந்த ஆற்றில் தண்ணீர் வடியும் வரை இதேநிலைதான்.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த ஊரை சேர்ந்த ஒரு 75 வயதுள்ள மூதாட்டி நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளார். அவரின் உடலை ஆற்றில் இடுப்பு வரையிலான தண்ணீரில் கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர்.

இதுப்பற்றிய தகவல் சில ஆதரவாளர்கள் கூற அதைக்கேட்டு அதிர்ச்சியான அந்த தொகுதி எம்.எல்.ஏவும், திமுக மத்திய மா.செவுமான நந்தகுமார், அரசாங்கத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. என் தொகுதி நிதியில் இருந்து பாலம் அமைத்து தர நிதி ஒதுக்கி தருகிறேன் எனச்சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை, நான் என்ன செய்வது, எல்லாவற்றுக்கும் போராடிக்கொண்டு தான் இருக்கிறேன் என்றுள்ளார்.

அண்மையில் பாலத்திலிருந்து கீழே கயிறின் மூலம் சடலம் இறக்கப்பட்டு உடல்  மயானத்திற்கு எடுத்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இன்றளவும் இறந்தவர்களை அடக்கம் செய்யவும் போராடுகிறார்கள் வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான கிராம மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.