சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள அரண்மனை சிறுவயல் கிராமத்தில் பழைய கட்டிடம் ஒன்றின் மராமரத்துப் பணி நடைபெற்று வந்தது. அப்போது சுவர் இடிந்து விழுந்து சரிய, அங்கு வேலைப் பார்த்துக் கொண்டிருந்த காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கொத்தனார் கண்ணன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். கல்லல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.