Skip to main content

புதுச்சேரி பட்ஜெட் 3 மணி நேரத்தில் முடிவு 

Published on 26/03/2018 | Edited on 26/03/2018
budget


 

புதுச்சேரி மாநிலத்தின் பதினான்காவது சட்டப்பேரவையின் 3-வது கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரையை தொடர்ந்து நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி ஏப்ரல், மே, ஜுன், ஜூலை ஆகிய 4 மாதங்களுக்கு அரசின் செலவினங்களுக்காக 2,468 கோடி ரூபாய்க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
 

அதனை தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்த தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தெரியாமல் புதுச்சேரி பேரவைக்கு பாஜகவை சேர்ந்த 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

budget


 

அதேசமயம் தாங்கள்  சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவும், இருக்கை ஒதுக்கவும் கோரி பா.ஜ.கவை சேர்ந்த சுவாமிநாதன், செல்வகணபதி, சங்கர் மூன்று பேரும் நுழைவாயில் முன்பாக போராட்டம் நடத்தினர். 
 

அதேபோல் முன்னதாக கவர்னர் கிரண்பேடி உரை நிகழ்த்த தொடங்கியதும், அப்போது பச்சை துண்டை தங்களது தலையில் போட்டபடி சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரன்பேடியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.
 

தொடர்ந்து ஆளுநர் உரையில் வீட்டுவசதி, குறைந்த செலவில் மருத்துவ சேவை,  பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிப்படை வசதி ஆகியவற்றை அளிப்பதன் மூலம் ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் நடப்பாண்டிற்கான திட்ட செலவினம் 2 ஆயிரத்து 334 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2016-17ம் ஆண்டு திட்ட செலவினங்களை விட 11.67 விழுக்காடு அதிகமாகும்.  மேலும் புதுச்சேரியில் தனிநபர் வருமானம் 2017-18ம் ஆண்டில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 124 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் இது சென்ற ஆண்டைவிட 8.89 விழுக்காடு அதிகம் . உள்ளிட்ட 58 அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தன.

 

budget


 

அதேசமயம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறி வந்த முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்து வருவதாகவும்,  அறிவித்த திட்டங்கள் எதையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை என கூறி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை கண்டித்து பிரதான எதிர்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 

இந்நிலையில் நியமனம் எம்.எல்.ஏக்கள் விவகாரத்தால் மூன்று நாட்கள் நடக்க வேண்டிய சட்டசபை கூட்டத்தொடர் மூன்று மணி நேரத்தில் முடிந்தது. சபாநாயகர் வைத்திலிங்கம் காலவரையின்றி கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Chennai Corporation budget tabled today

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம்(19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். 

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நேற்று (20-02-24) 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (21-02-24) தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2023 - 2024ஆம் ஆண்டுக்கான விரிவான பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில், ‘மக்களை தேடி மேயர்’ உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று (21-02-24) காலை 10 மணிக்கு மேயர் பிரியா தாக்கல் செய்கிறார். 

இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், பள்ளி, கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மீதான விவாதம் நாளை (22-02-24) நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“மண் வளத்தை காக்க புதிய திட்டம்” - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Minister MRK Panneerselvam says Government will procure agricultural produce

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று (20-02-24) 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  தாக்கல் செய்தார். இதனையடுத்து அவர் பேசியதாவது, “2020-2021ம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 2022-23ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நடப்பாண்டிலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பணிகளுக்கான ஊதியம் தற்போது அதிகமாக உள்ளது. இதனை எதிர்கொள்ள வேளாண் பணிகளுக்கு தேவையான அனைத்து வகையான வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. கலைஞர் வேளாண் திட்டம் 7,075 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, வேளாண் பொருட்களை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்கிறது. 

கடந்த டிசம்பரில், தென்மாவட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக 208 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட 6 கோடி மானியம் வழங்கப்படும். பூச்சி மேலாண்மை செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். அமிலம் கலந்த நிலத்தை சீர்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூச்சிநோய் தாக்கத்தை கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.

Minister MRK Panneerselvam says Government will procure agricultural produce

வரும் நிதியாண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. மண்வளத்தை பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து செய்முறைகளையும் ஊக்கப்படுத்த ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும். ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு 6.27 கோடி நிதி ஒதுக்கீடு. மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம் வழிவகுத்துள்ளது. சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பஞ்சகவ்யம், மண்புழு  உரம் தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள குழுக்களுக்கு ரூ.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறிய, பெரிய நாற்றங்கால் அமைக்க வேளாண் காடுகள் திட்டத்திற்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும். ஒருங்கிணைந்த பண்ணை தொடங்க ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

Minister MRK Panneerselvam says Government will procure agricultural produce

வாழை, பப்பாளி உள்ளிட்ட பழ வகைகளை வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்க ஊக்கிவிக்கப்படும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் இரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும். எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  ரூ. 5 கோடி மாநில நிதியில் 100 உழவர் அங்காடிகள் செயல்படுத்தப்படும். தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி, விவசாயிகளுக்கு கொடுக்க ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அனைத்து பயிர்களின் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நோக்கில் 4,75,000 பரப்பில் அதிகரிக்க ரூ.40.27 கோடி ஒன்றிய மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சூரியகாந்தி பயிர் விரிவாக்கத்திற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் உற்பத்தி தரமான விதைகளை பயன்படுத்தினால் 15% மகசூலை அதிகரிக்கலாம். மொத்தம் 15, 810 விதை வகைகளை 50 முதல் 60% தள்ளுபடியில் விவசாயிகளுக்கு வழங்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். துத்தநாகம் ஜிப்சம் வாங்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். 2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். “ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.

விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள் இடம்பெறும். நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைக்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடினத்தைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு 20% கூடுதல் மானியம் வழங்கப்படும். பருத்தி சாகுபடி பெருக்கத்தை அதிகரிக்க 14.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வருவாய் இழப்பில் இருந்து மீண்டு வர ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.” என்று கூறினார்.