Skip to main content

'பப்ஜி' மதன் தலைமறைவு... போலீசார் விசாரணை!

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

'Bubji Madan' absconding ... Police investigation!

 

ஆன்லைன் பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசிவரும் 'பப்ஜி மதன்' என்கிற யூடியூபர் தலைமறைவான நிலையில், அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். மேலும், அந்த நபரின் சமூகவலைதளப் பக்கத்தை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஆன்லைன் விளையாட்டு மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்களை ஆபாசமாகப் பேசி யூடியூப் சேனலில் பதிவிட்டுவந்த மதன் என்ற நபர் மீது புகார்கள் குவிந்தன.  இதுதொடர்பாக 2 புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த இரண்டு புகார்களின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தார்கள். ஆனால், இதுவரை மதன் ஆஜராகவில்லை. 

 

மதன் இருக்கும் லொகேஷனைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில், ஒருவித தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னுடைய இருப்பிடத்தை வேறுவேறு இடமாக மாற்றிக் காட்டக்கூடிய வகையில் மதன் செயல்படுவதாக தெரியவந்துள்ளது. ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட மதன், 'டாக்ஸிக் மதன்', '18 ப்ளஸ்' ஆகிய இரு யூடியூப் சேனல்களை முடக்க காவல்துறையினர் யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் அளித்துள்ளனர். அதேபோல் மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது காவல்துறை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.