தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் சமீபகாலமாக கொலையாளிகளின் கூடாரமாகிவருகிறது. சில ஆண்டுகளுக்குள் பல கொலைகள்.

Advertisment

murder

இந்த வரிசையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 14 ந் தேதி பட்டுக்கோட்டை நரியம்பாளையம் தம்பா கார்த்தி என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் அதே பட்டுக்கோட்டை எம்.என் தோட்டம் பகுதியை சேர்ந்த 7 பேரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisment

தற்போது 7 பேரும் நிபந்தனை பிணையில் வந்து தினசரி கையெழுத்து போட்டு வருகின்றனர். இந்த 7 பேரும் ஒரே நேரத்தில் ஒன்றாக வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

murder

இன்று காலை ஒரு குட்டியானையில் மொத்தமாக வந்து கையெழுத்து போட்டு வீட்டுக்கு திரும்பிய போது எம்.என் தோட்டம் பகுதியில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டை அந்த குட்டியானை மீது அடுத்தடுத்து வீசியதால் அதிகமான புகை வந்த போது பிரகாஷ் (22) என்ற இளைஞர் மட்டும் குதித்துவிட மற்றவர்கள் தப்பிவிட்ட நிலையில் அந்த கும்பல் பிரகாஷை சரமாரியாக வெட்டியதுடன் தலையை துண்டித்து எடுத்துச் சென்று பாளையம் சாலையில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

Advertisment

பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பலிக்கு பலி என்று மாதம் ஒரு கொலை நடப்பதால் குடியிருக்கவே அச்சமாக உள்ளது என்கிறார்கள் நகர மக்கள்.