Skip to main content

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பிரவுசிங் சென்டர் உரிமையாளர் தற்கொலை! 

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

Browsing center owner commits after losing money police investigation

 

ஆன்லைன் சூதாட்டங்கள் உயிர்களை காவு வாங்கும் கொடுமைகள், அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால், பிரவுசிங் சென்டர் உரிமையாளரின் உயிரும் தற்கொலைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. 

 

சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த தினேஷுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. கோயம்பேட்டில் குளோபல் நெட் என்ற பெயரில் பிரவுசிங் சென்டரை நடத்தி வந்த இவர், வீட்டின் வரவேற்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

 

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தினேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

முதற்கட்ட விசாரணையில், தினேஷ் தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடப் பழக்கம் உடையவர் என்பதும், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால், மனமுடைந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானது தெரிய வந்தது. கடனைத் திருப்பி தர முடியவில்லை என்பதால், தினேஷ் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, தினேஷின் செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர், அதனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், பெருங்குடியில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளைக் கொன்றுவிட்டு வங்கி அதிகாரி ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த வாரம் நடந்தது. அதேபோல், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், கடனுக்கு ஆளான ரயில்வே ஊழியர் ஒருவர் டிக்கெட் கவுண்டரில் பணத்தைக் கொள்ளையடித்து நாடகமாடி கைதானார். 

 

ஆன்லைன் சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோகும் நிலையில், அதனை தடுக்கும் வகையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்  என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.