Skip to main content

அக்காவை கொன்ற தம்பி! இதுதான் காரணம்?

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
sindu


ஈரோடு மாவட்டம், சென்னிமலை நெசவாளர் காலனியை சார்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் தனசேகர் (24) நிரந்தரமான வேலையில்லாமல் அவ்வப்போது  கிடைக்கும் கூலி வேலைகள் செய்து  வருகிறார். இதே நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் ஆறுமுகம், இவரது மனைவி சிந்து (27). ஆறுமுகம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்திலும், சிந்து சென்னிமலையில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் பணியாற்றி வருகின்றனர்.
 

தனசேகர் சிந்துவுக்கு உறவினர். தம்பி முறை. பல வருடங்களாக சிந்து வீட்டாரோடு நெருங்கி பழகி வருகிறார். இந்த நிலையில் சிந்துவின் கணவர் ஆறுமுகம் தனசேகரிடம் குடும்ப செலவிற்கு ஐந்தாயிரம் பணம் கேட்டுள்ளார். நேற்று முன்தினம் ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட தனசேகர் தோப்புபாளையம் கிராமத்தில் உள்ள  நண்பர் ஒருவர் பணம் தருவதாக செல்லியிருக்கிறார்.
 

 

 

நீங்களோ அல்லது அக்கா சிந்துவோ நேரில் வரவேண்டும் என கூற, ஆறுமுகம் நான் வேலையாக இருக்கிறேன் உன் அக்காவை அழைத்து செல் என கூறியுள்ளார். காலை பத்து மணிக்கு சிந்து வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று அவரை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார் தனசேகர். பிறகு மாலை சுமார் 3 மணிக்கு  ஆறுமுகத்தை சந்தித்த தனசேகரன் பணம் ஐந்தாயிரத்தை கொடுத்து விட்டு அக்காவை பனியம்பள்ளி என்ற இடத்தில் பஸ் ஏற்றி விட்டேன் என சொல்லியிருக்கிறார். 


ஆனால் தனது மனைவி சிந்துவின் செல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததோடு அவர் வீட்டுக்கும் வரவில்லை. இரவாகியும் வீடு வந்து சேராததால் அதிர்ச்சியடைந்த  உறவினர்கள் தனசேகரனை விசாரித்துள்ளனர். அவர் குடிபோதையில் இருந்ததோடு முன்னுக்கு பின் முரனாக பேச சந்தேகமடைந்த அவர்கள் தனசேகரனை சென்னிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 

போலீசார் விசாரித்த போது, ஐந்து பவுன் நகைக்காக சிந்துவை கொன்று ஊத்துக்குளி அருகே உள்ள வனப்பகுதியில் பிணத்தை மறைத்து வைத்துள்ளதாக கூறியிருக்கிறார். நேற்று காலை 10 மணியளவில் தனசேகரனே சிந்துவின் பிணத்தை அடையாளம் காட்டினான்.
 

 

 

சம்பவ இடத்திற்கு பெருந்துறை டி.எஸ்.பி. ராஜ்குமார், சென்னிமலை ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள், ஆய்வு செய்தனர்.
 

மேலும் தனசேகரனை விசாரித்தபோது, எனக்கு சரியான வேலை இல்லாததால் பண நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் ஆறுமுகம் பணம் கேட்டார். அதனால் ஒருவர் வட்டிக்கு பணம் கொடுப்பதாக அவளை பைக்கில் அழைத்து சென்றேன். அவள் கழுத்தில் இருந்த நகையை பார்த்ததும் என் மனது மாறியது. விஜயமங்கலம் ரயில் நிலையம் அருகே சென்ற போது அங்கிருந்த வனப்பகுதியில் சென்றேன். அப்போது பைக்கில் இருந்து இறங்கிய சிந்து இங்கே எதற்காக என்னை அழைத்து வந்தாய் என தகராறு செய்தாள்.
 

 

 

அப்போது அங்கே கிடந்த கல்லை எடுத்து சிந்துவின் மண்டையில்  அடித்தேன். அவள் மயங்கினாள் அப்போதும் அவள் உயிர் போகாததால், சிந்துவின் முந்தானையை எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் அவள் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தாலிக்கொடியை கழட்டி வந்து எனது உறவினர் பெயரில் தனியார் வங்கியில் 60 ஆயிரத்திற்கு அடமானம் வைத்தேன். பின்னர் அதே பணத்தில் ஐந்தாயிரத்தை சிந்துவின் கணவரிடம் கொடுத்தேன். பின்னர் எனக்கிருந்த கடன்களை முழுவதும் அடைத்தேன். சிந்துவின் கணவரிடம், சிந்து பஸ் ஏறி வீட்டிற்கு போய்விட்டதாக பொய் சொன்னேன். எனக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் தான் கொலை செய்தேன் என போலீசிடம் முதலில் கூறியுள்ளான்.
 

கொலையான சிந்துவுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிந்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளளது. நகைக்காக இந்த கொலை சம்பவம் நடந்துள்ள என்று தெரிய வந்ததாலும், கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.