Skip to main content

85 சென்ட் நிலத்துக்காக அண்ணனை கொன்ற தம்பிகள்; காவல்துறை விசாரணை!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

brother passes away in the issue of land

 

சேலம் அருகே, 85 சென்ட் நிலத்தை பாகம் பிரிப்பதில் முட்டுக்கட்டையாக இருந்த பெரியம்மா மகனை, கத்தியால் வெட்டிக்கொன்ற தம்பிகள் மற்றும் சித்தியைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள அத்திமரத்து வலவு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கு உண்ணாமலை, சின்னம்மாள் என இரண்டு மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவி உண்ணாமலைக்கு சின்னதம்பி (41), ராஜேந்திரன் என இரண்டு மகன்களும், இரண்டாம் தாரமான சின்னம்மாளுக்கு முனியப்பன், பூபாலன் என இரு மகன்களும் இருக்கின்றனர். அனைவரும் ஒரே இடத்தில் வசிக்கின்றனர்.

 

இவர்களுக்கு சொந்தமாக தலா 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இது தவிர, பொதுவாக உள்ள 85 சென்ட் நிலத்தைப் பாகம் பிரித்துக் கொடுப்பதில் இரண்டாவது மனைவியின் மகன்களுக்கும், மூத்த மனைவியின் மகன் சின்னதம்பிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 30) அதிகாலையில் சின்னதம்பி வயலில் தண்ணீர் பாய்ச்சிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். வெள்ளிக்காட்டுவலவு பகுதி அருகே வந்தபோது, அவரை சித்தி சின்னம்மாளும், அவருடைய மகன்களும் வழிமறித்து தகராறு செய்தனர். நிலத்தைப் பிரித்துக் கொடுப்பதில் முட்டுக்கட்டை போடக்கூடாது என்றனர். அதற்கு சின்னதம்பி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சின்னம்மாளின் மகன்கள் சின்னதம்பியை சரமாரியாக தாக்கினர். கத்தியால் அவருடைய கழுத்து, கைகளை வெட்டிக் கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த சின்னதம்பி சம்பவ இடத்திலேயே பலியானார். கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள், சம்பவ இடத்துக்கு ஓடி வருவதைப் பார்த்த சின்னம்மாளும், அவருடைய மகன்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

 

இதுகுறித்து தகவல் அறிந்த கருமந்துறை காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலத்தை, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பொதுவாக உள்ள 85 சென்ட் நிலத்தைப் பாகம் பிரித்துக்கொள்வதில் சின்னதம்பி முட்டுக்கட்டையாக இருந்ததால், ஆத்திரத்தில் அவருடைய சித்தியின் மகன்கள் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள முனியப்பன், பூபாலன், சின்னம்மாள் ஆகியோரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பக்கெட்டுக்குள் தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழப்பு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
A 9-month-old baby lose their live after falling into a bucket

கோபிசெட்டிபாளையம் அருகே தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீம்(35). இவரது மனைவி ரீமா(32). இவர்களுக்கு ரோஷினி, ரட்சனா, ராணி, அமித் மற்றும் ராசி (9 மாத கைக்குழந்தை) இருந்தனர். இவர்கள் அனைவரும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர், பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் மில் குடியிருப்பில் தங்கி கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை கணவர் பீம் பால் வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டார். வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். அப்போது துணிகளை துவைப்பதற்காக மனைவி ரீமா பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீருடன் சோப்பு பவுடரை கலந்து வைத்துவிட்டு வீட்டிற்குள் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். குழந்தை ராசி வீட்டிற்கு வெளியே இருந்துள்ளது. பின்னர் சமையல் வேலையை முடித்து விட்டு ரீமா வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார்.  அப்போது குழந்தை ராசி சோப்பு தண்ணீர் பக்கெட்டிற்குள் தலைகீழாக விழுந்து கிடந்தது தெரியவந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரீமா ஓடிச் சென்று  குழந்தையை தூக்கிய போது குழந்தை பேச்சு மூச்சு இன்றி இருந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம்  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

50 மீட்டர் தரதரவென இழுத்துச் சென்ற எருமை; பொதுமக்களே மீண்டும் உஷார்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
50 meter standard drawn buffalo; Public beware again

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்த சென்ற பெண்ணை எருமை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே சென்னையில் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தது. அது மட்டுமல்லாது முதியவர்கள் சிலர் மாடு தாக்கி உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள கிராமத்து தெரு என்ற தெருவில் நடந்து சென்ற பெண் ஒருவரை எதிர்புறத்தில் நடந்து வந்து கொண்டிருந்த எருமை மாடு எதிர்பாராத விதத்தில் முட்டியது. மேலும் கொம்பில் சிக்கிக்கொண்ட அப்பெண்ணை தாறுமாறாக சுழற்றியதோடு. அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு அந்தப் பெண்ணை இழுத்துச் சென்றது. இந்தக் காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. பெண்ணை மீட்க வந்தவர்களையும் அந்த எருமை மாடு முட்டியது. இதில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே சென்னையில் வளர்ப்பு நாயால் ஒரு சிறுமி கடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது எருமை மாடு முட்டி பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.