Advertisment

அக்கா - தம்பி கழுத்தை அறுத்து படுகொலை; சேலத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

Brother and sister incident in Salem

சேலம் மாவட்டம் தும்பல்பட்டியை சேர்ந்தவர்கள் ராஜா(45) - சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். விவசாயியான இவருக்கு அந்த பகுதியில் விவசாயத் தோட்டம் ஒன்றுள்ளது. இந்த நிலையில் அந்த தோட்டத்தில் நேற்று இரவு ராஜா, அவரது மகள் மற்றும் மகன் ஆகிய மூவரும் கழுத்து அறுக்கப்பட்டுக் கிடந்துள்ளனர். அதில் மகள் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த நிலையில் ராஜா கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

Advertisment

இதனை அவ்வழியாக சென்ற சிலர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ராஜாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜாவின் மகள் மற்றும் மகன் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisment

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நேற்று ராஜா, அவரது மகன் மற்றும் மகள் மூவரும் தோட்டத்திற்குச் சென்று பூக்களை பறித்துகொணிருந்துள்ளனர். அப்போது ஒருவர் நபர் தோட்டத்திற்கு வந்து ராஜாவிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த தகராறு முற்ற ராஜாவின் மகளும், மகனும் அதனைத் தடுத்துள்ளனர். இந்த நிலையில்தான் அந்த நபர் கத்தியால் ராஜா, அவரது மகன் மற்றும் மகள் ஆகிய மூவரின் கழுத்த அறுத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே குழந்தைகள் இருவரும் உயிரிழக்க, ராஜா மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் விசாரணையைத் தொடர்ந்துள்ள போலீசார் கொலையாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

brother police Salem sister
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe