Skip to main content

18 நாட்களில் உடைந்த பாலம்; சிக்கிக் கொண்ட மணல் லாரி - தப்ப வைக்கப்படுகிறாரா ஒப்பந்தக்காரர்?

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

A broken bridge on the 18th day; Stranded sand truck- Is the contractor being rescued?

 

தஞ்சை மாநகராட்சியில் 18 நாட்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட பாலத்தில் மணல் லாரி சென்றபோது பாலம் உடைந்து அதில் லாரி சிக்கிக் கொண்டு அந்தரத்தில் தொங்கியது. இந்த சம்பவத்தில் லாரி உரிமையாளர், ஓட்டுநர் மீது புகார் கூறும் மாநகராட்சி தரமற்ற பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரர் மீதான நடவடிக்கை என்ன என்பதை சொல்லவில்லை.

 

தஞ்சை மாநகராட்சி கீழவாசல் சிராஜுதீன் நகரில் மழைநீர் செல்ல அமைக்கப்பட்டிருந்த ஆதாம் வடிகால் வாய்க்கால் பாலம் பழுதடைந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வடிகால் அமைக்கும் பணியின் ஒன்றாக ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் ஆதாம் வடிகால் வாய்க்கால் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 18 நாட்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது. இந்த பாலத்தின் வழியாக அப்பகுதி மக்களின் இருசக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. 4 பள்ளிகள், ரேஷன் கடைக்கு என இந்தப் பாலத்தை கடந்தே செல்ல வேண்டும். புதிய பாலம் என்பதால் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுத்திருக்க வேண்டும் அதை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

 

A broken bridge on the 18th day; Stranded sand truck- Is the contractor being rescued?

 

இந்நிலையில் மணல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று இந்தப் பாலத்தின் மீது சென்றபோது பாலம் உடைந்து அதன் பின் சக்கரங்கள் பள்ளத்தில் புதைந்து முன்பக்கம் தூக்கி அந்தரத்தில் நின்றது. அந்த லாரியில் இருந்த மணல் வேறு வாகனங்களில் மாற்றப்பட்ட பிறகு லாரி மீட்கப்பட்டது. தகவலறிந்து வந்த மாநகர மேயர் சண்.ராமநாதன், “கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்காத பாலத்தில் லாரி சென்றதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி மீது தான் தவறு என்பதை லாரி உரிமையாளர் எழுதிக் கொடுத்திருக்கிறார். விரைவில் புதிய பாலம் கட்டி தருவார்” என்றார்.

 

அப்பகுதி மக்களும், எதிர்க்கட்சியினரும் தரமற்ற முறையில் பாலம் வேலை நடக்கிறது என்று புகார் சொன்ன போது மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. பாலம் வேலை பார்க்கும் ஒப்பந்தக்காரர் பெயர் விபர பதாகை வைக்கவில்லை. கனரக வாகனங்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பதாகையும் இல்லை. இப்போது லாரி ஓனர், ஓட்டுநர் மீது வழக்கு போடும் மாநகராட்சி நிர்வாகம் தரமற்ற பாலம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது ஏன் புகார் கொடுக்க மறுக்கிறார்கள். விபத்துக்கு காரணமான தரமற்ற பாலம் கட்டிய ஒப்பந்தக்காரரை மாநகராட்சி காப்பாற்ற நினைக்கிறதா என்பது தெரியவில்லை. இதற்கு மாநகராட்சி தெளிவான பதில் கொடுக்க வேண்டும் என்றனர்.

 

18 நாளில் ஒரு பாலம் உடையுதுன்னா எவ்வளவு தரமான பாலமாக இருக்கும்?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.