டைடல் பார்க் அருகே புதிய பாலத்துக்கு முதல்வர் அடிக்கல்! (படங்கள்)

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பூங்கா அருகே ரூபாய் 55 கோடியில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் ரூபாய் 82 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், சென்னை ராஜீவ்காந்தி சாலையில் டைடல் பார்க் அருகே புதிய மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூபாய் 108.13 கோடியில் யூ வடிவில் மேம்பாலம் கட்டப்படுகிறது.

ஓஎம்ஆர் சாலை- ராஜீவ்காந்தி சாலை- திருவான்மியூர் சாலை சந்திக்கும் இடத்தில் பாலம் கட்டப்படுகிறது.

Bridge Chennai cm palanisamy Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe