Skip to main content

நோட்டமிட்டு உள்நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார்! அதிர்ச்சியில் ஆழ்ந்த ஈரோடு மண்டல அதிகாரிகள்! 

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

Bribery police who watched and entered! Erode zonal authorities in shock!

 

ஈரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் மூன்றாவது தளத்தில் ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலமாகத்தான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகள், ஏற்கனவே ஈரோடு மாவட்டத்திலிருந்து பிறகு திருப்பூர் மாவட்டம் பிரிப்புக்கு பிறகும் நிர்வாக ரீதியாக செயல்படும் பேரூராட்சிகளான திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 15 பேரூராட்சிகள் என மொத்தம் 57 பேரூராட்சிகளில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

 

இதில் சாலை பணிகள், கட்டுமான பணிகள் திட்டமிடுதல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்படுகிறது. பேரூராட்சி பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்க ஒப்பந்ததாரர்களிடம் இருந்து அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்திருக்கிறது. இதை தொடர்ந்து 21 மற்றும் 22ந் தேதி என இரு நாட்களாக அலுவலக நடவடிக்கையை போலீசார் ரகசியமாக கண்காணித்து அதை உறுதிப்படுத்தினார்கள்.

 

ஈரோடு லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் போலீசார், 23ந் தேதி மாலை பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு ஒரு சேர நுழைந்து  திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு பணியில் இருந்த அனைத்து ஊழியர்களின் செல்போன்களையும் பெற்று கொண்ட போலீசார் தங்களது சோதனையை தொடங்கினார்கள். அப்போது பலரின் மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும், அனைத்து அதிகாரிகளின் கைப்பைகள், மேஜைகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனையிட்டனர். அவர்களிடமிகுந்த பணத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. பலர் பணக்கட்டுக்களை தூக்கி வெளியே எறிந்தனர். அதையும் விடாமல் போலீசார் கைப்பற்றினர்.

 

இந்த சோதனையில் கணக்கில் வராத மொத்தம் ரூபாய் 51 லட்சத்து 32 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மதியம் 3 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு 11 மணி வரை நடந்தது. இதில் கைப்பற்றப்பட்ட 51.32 லட்சம் பணத்தை அதிகாரிகள் கொண்டு சென்றனர். 

 

லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி ஈரோடு அலுவலக உதவி செயற்பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர் லீலாவதி, திருப்பூர் திருமுருகன் பூண்டி பேரூராட்சி இளநிலை பொறியாளர் செல்லதுரை, மூலனூர் பேரூராட்சி மின் பணியாளர் செல்வம், ஈரோடு அலுவலக தற்காலிக பணியாளர் வெங்கடேஷ் பிரபு ஆகிய 5 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் கோவையில் உள்ள உதவி செயற்பொறியாளர் நாகராஜன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.