Skip to main content

லாரி திருட்டுக்கு லஞ்சம்; 6 போலீசார் நிரந்தர பணி நீக்கம்

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

Bribery for lorry theft; Permanent dismissal of 6 policemen

 

லாரி கடத்தல் வழக்கில் லஞ்சம் வாங்கிய 6 காவல்துறையினர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. லாரி தொழில் செய்து வரும் முரளி கடந்த 2015 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் தனது லாரியை கடத்தி வந்து விற்பனை செய்ததாக காவல்துறையில் புகாரளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை தேடி வந்தனர். தொடர்ந்து நாட்றம்பள்ளி காவல்நிலைய போலீசார் இந்த லாரி திருட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்பொழுது பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் காமராஜ், சப் இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் லாரியை திருடியது தெரியவந்தது. ராஜசேகரிடம் லாரியை ஒப்படைக்குமாறு கூறிய நிலையில், தான் லாரியை உடைத்து விற்று விட்டதாக ராஜசேகர் தெரிவித்தார். லாரியை கொடுக்கவில்லை என்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இல்லையெனில் லாரிக்கான 15 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால் 2015 ஆம் ஆண்டு ஏழு லட்சம் ரூபாய் முதல் தொகையை ராஜசேகர் கொடுத்துள்ளார். தொடர்ந்து மீதி பணத்தையும் கொடுக்குமாறு இன்ஸ்பெக்டர் காமராஜ், சப் இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வற்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜசேகர் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

 

புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நாட்றம்பள்ளி காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது கணக்கில் வராத 7 லட்சம் ரூபாய் இருந்தது. 7 லட்சத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் போலீசார் ஏன் காவல் நிலையத்திலேயே வைத்திருந்தனர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர். போலீசார் சார்பில் முறையான பதில் சொல்லப்படாததால் இருவர் மீதும் லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில், தற்போது தமிழக காவல்துறை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கு சம்பந்தமாக அப்போது பணியிலிருந்த குற்றப்பிரிவு தலைமைக் காவலர் கார்த்திக், அறிவுச்செல்வம், நாசர், ரகுராம் ஆகிய நான்கு பேருக்கும் தொடர்புள்ளது. எனவே காவல் ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் குற்றப்பிரிவு தலைமைக் காவலர் நாசர், ரகுராம் உள்ளிட்ட ஆறு பேரும் நிரந்தர பணி நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.