Skip to main content

குட்கா கும்பலிடம் லஞ்சம் வசூல்; 4 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு எஸ்ஐ கோபால் தலைமையில் காவலர்கள் சிலர், சனிக்கிழமை (நவ. 30) இரவு, மோட்டூர் சந்திப்பு அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த ஒரு வேனை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.


இதையடுத்து, அந்த வாகனத்தில் இருந்த 23.67 லட்சம் ரூபாய் புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன ஓட்டுநரான விழுப்புரத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (30) என்பவரை கைது செய்தனர். 

 Bribery charges four police suspend krishnagiri police sp announced


வழியில் சுங்கச்சாவடி, மற்றும் வாகனத் தணிக்கை நடத்திய காவல்துறையினரிடம் இருந்து எப்படி போதைப் பொருள்களுடன் மோட்டூர் வரை வர முடிந்தது என்பது குறித்து வாகன ஓட்டுநரிடம் விசாரித்தனர். 


குருபரப்பள்ளி அருகே வந்தபோது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த வாகனத்தை மடக்கியுள்ளனர். அவர்கள் ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு வாகனத்தைச் செல்ல அனுமதித்துள்ளனர். அதேபோல் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகிலும் காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக்கொண்டு வாகனத்தை அனுமதித்து இருப்பது தெரிய வந்தது.


இதுகுறித்து மாவட்ட எஸ்பி பண்டி கங்காதரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவத்தன்று குட்கா வேன் ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்றதாக குருபரப்பள்ளி காவல்நிலையத்தைச் சேர்ந்த 3 காவலர்கள், கிருஷ்ணகிரி காவல்நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவலர் என மொத்தம் நான்கு காவலர்களை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து எஸ்பி பண்டி கங்காதர் உத்தரவிட்டார்.


மேலும், புகையிலைப் பொருள்கள் எங்கிருந்து, எந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது?, இதன் பின்னணியில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.