திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ளஅனுமதி வழங்க லஞ்சம் கேட்டதாக கூறி ஆடியோ வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட தாசில்தார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
கிளியூர் பத்தாலப்பேட்டை பகுதி காவிரி ஆற்றில் லாரியின் மூலம் திருட்டுத்தனமாக மணல் அள்ள அனுமதி கேட்ட நபரிடம் திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரை லஞ்சம் கேட்ட ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த ஆடியோவில்
மணல் அள்ளுபவர் :சார் சொல்லுங்க சார் உங்கள பாக்கலாம்னு
தாசில்தார்: பாக்குறேன்னு பாக்குறேன்னு சொல்லிட்டு இப்படியே நாட்களைஓட்டிக் கொண்டிருக்கிறதா?
மணல் அள்ளுபவர்: இல்ல சார் நீங்க சொல்லுங்க சார் நீங்க சொல்லுங்க சார் நான் பண்ணிடுறேன்..சார் தீபாவளி வரைக்கும் பண்ணுகிறேன் சார் ரெண்டே ரெண்டு வண்டி மட்டும் ஓட்டிக்கிறேன் சார்,
தாசில்தார்: 50 ரூபாய்கொடுத்திருங்க ,
மணல் அள்ளுபவர்: கொண்டுவர சார்,
தாசில்தார்: மாத்தி மாத்தி ஆளுங்களவிடக்கூடாது,
மணல் அள்ளுபவர்: இல்ல சார் நம்ம வண்டி ரெண்டு வண்டி மட்டும் தான் வேற எந்த வண்டியும் வராது சார் அதுக்கு நான் கேரண்டி சார் ,
தாசில்தார்: சரி சாயந்தரம் அம்பது ரூபா பணத்தைகொண்டுவந்து கொடுத்துடுங்க,
மணல் அள்ளுபவர்: ஓகே சார் தேங்க்யூ.
இந்த ஆடியோவானது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட தாசில்தார் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தாசில்தார் அண்ணாதுரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் திருவெறும்பூருக்கு புதிய தாசில்தாராகரஃபிக் அகமது என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.