Skip to main content

மணல் கடத்தலில் லஞ்சம் குவிப்பு! -கதிகலங்கும் போலீஸ் அதிகாரிகள்!

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

மணல் கடத்தலில் லஞ்சப் பணம் பெற்ற போலீஸ்காரர் ஒருவரை துணிச்சலாகக் கைது செய்து உள்ளே தள்ளியிருக்கிறார் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரான அருண்சக்தி குமார். எஸ்.பி.யின் அந்தத் துணிச்சல் நடவடிக்கை தமிழகத்தில் முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது என்கிறார்கள் காவல் அதிகாரிகள்.

 

Bribe in sand smuggling

 

நெல்லை மாவட்டத்தின் உவரி காவல் நிலைய போலீஸ் ஆய்வாளர் சாந்தி செல்வி, இரவு ரோந்திலிருந்த போது, மணல் லாரி ஒன்றை சோதனையிட்டிருக்கிறார். நடைச்சீட்டோ, மணல் பெர்மிட் எதுவுமில்லாமலிருந்ததால் அதைக் கைபற்றியவர், அது தொடர்பாக, உறுமன்குளம் சின்னத்துரை, முத்துக்குமார், கண்ணன் மூன்று பேரைக்கைது செய்திருக்கிறார். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சின்னத்துரையின் செல்லை ஆய்வு செய்ததில் அதில் திசையன்விளை, காவல் ஆய்வாளரின் டிரைவரான போலீஸ்காரர் சிவாவின் வாட்ஸ்ஆப் எண்கள் ஏராளமாக இருந்ததோடு, அதில் மணல் கடத்தலுக்கு தகுந்த நேரத்தையும் குறிப்பிட்டிருந்ததோடு, மணல் கடத்தலுக்கான லஞ்சப் பணம் பல தடவை கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் இருந்ததை ஆவணப்படுத்திய இன்ஸ்பெக்டர், கூடுதல் தகவலாக, மணல் கடத்தப்படுவதை தடுப்பதற்காக எஸ்.பி. தனிப்பிரிவின் ஏட்டு நந்த கோபால் மேற்கொண்ட மூவ்மெண்ட் பற்றித் தெரியப்படுத்தி மணல் கும்பலை உஷார்படுத்தி மணல் கடத்தலுக்கு உதவியதையும் தெரிந்து அதிர்ந்திருக்கிறார்.

 

இதையடுத்து விசாரணை ஆதாரங்கள் முழுவதையும் எஸ்.பி.யான அருண் சக்தி குமாரிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து அவரது ஆலோசணையின் படி, போலீஸ்காரர் டிரைவர் சிவாவைக் கைது செய்து அவரிடம் மேல் விசாரணை நடத்தியிருக்கிறார்.

 

Bribe in sand smuggling

 

மேலும் விசாரணையில் திசையன்விளை காவல் நிலையத்தின் முக்கிய அதிகாரிகளுக்கும் மணல் மாமூல், டிரைவர் சிவா மூலம் சென்றதும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்துக் கைதான சிவாவை எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

தொடர்ந்து மணல் கடத்தல் கும்பலுடன் தொடர் தொடர்பிலிருந்த திசையன்விளை காவல் நிலைய ஏட்டு ஒருவர், இதன் சூத்ரதாரி என்றும் தெரியவந்துள்ளதாம். இதையடுத்து, அவர் குறிப்பிட்ட அந்த ஏட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் பலர் கதிகலங்கிப் போயுள்ளனர்.

 

மணல் கடத்தலுக்கு உடந்தை, லஞ்ச விவகாரம் போன்றவை வெளியேறிய அடுத்தகணம், லஞ்சத்தில் பங்கு பெற்ற அதிகாரி ஒருவர் தனது பெயரை சொல்லிவிட வேண்டாம். பதிலுக்கு அவருக்கு உதவுவதாகக் கெஞ்சிய தகவலும் ஓடுகின்றன.

 

கடந்த வருடம் திருட்டு மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற அருகிலுள்ள விஜய நாராயணம் காவல் நிலைய தனிப்பிரிவு ஏட்டு ஜெகதீஷ் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டு விவகாரமானதும் இந்தப் பகுதியில்தான். தற்போது போலீஸ்காரர் ஒருவர் மூலம் மணல் லஞ்சம் கைமாறியது பிடிபட்டு கைது வரை போயிருக்கிறது.

 

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தக் காவல் லிமிட்டில் நடந்த கொலை ஒன்றில் முக்கிய குற்றவாளி மறைக்கப்பட்டதிலும் வைட்டமின் எம் கைமாறிய தகவலும் தற்போது கசியத் தொடங்கியிருக்கிறது.

 

நுங்கு தின்றவர்கள் தப்பிவிட்டனர். அதைத் தொட்டு நாவில் தடவியவர் சிக்கிக் கொண்டார் என்கிற சூசகத் தகவலும் ஒடுகிறது.

 

மணல் லஞ்ச விசாரணை முறைப்படி, நெருக்கடியின்றித் தொடருமானால், அதிகாரிகள் உட்பட போலீஸ்காரர்கள் சிக்குவார்கள் என்பதே பரவலானப் பேச்சு.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.