Skip to main content

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் வராது - மருத்துவர் விளக்கம்

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

மனித வாழ்வு இயந்திர தன்மையோடு சுற்றிக் கொண்டுள்ளது. இதில் பிரதானமாக நோய் என்கிற அரக்கன் ஊடுருவி வாழ்வை சிதைக்கும் கொடூரம் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு சமீப காலமாக பல்வேறு வகையான நோய் நொடிகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.பிரதானமானது மார்பக புற்றுநோய்.

 

Breast Cancer-Doctor explanation

 



இந்த மார்பக புற்றுநோய் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் சொற்பமான வகையில் இருந்தது. ஆனால் இப்போது அதிக எண்ணிக்கையில் கூடியுள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் இந்திய பெண்கள் 100 பேரில் 20 பேருக்கு மார்பக பிரச்சனையும், அதனால் ஏற்படும் கட்டிகளில் 10 சதவீதம் பேர் புற்று நோய்க்கு உள்ளதாகவும் வெளிவந்துள்ளது.

இந்த புற்றுநோய் ஏன் இப்போது வளர்ந்து வருகிறது என்பதை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் ஈரோடு மாவட்ட கண்காணிப்புக்குழு அலுவலரும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை முதன்மை செயலாளருமான பாலச்சந்திரன் ஐஏஎஸ் தலைமையில் ஒரு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முகாமிற்கு பெயர் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறிதல் என்பது தான்.

 

Breast Cancer-Doctor explanation

 



குறிப்பாக அரசு ஊழியர்கள் இந்த புற்றுநோயில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது. இது அடுத்த மூன்று நாட்கள் வரை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பாலச்சந்திரன் ஐஏஎஸ், "இப்போதெல்லாம் பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு போகிறார்கள். இதில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறையில் அதிக அளவில் பெண்கள் பணிபுரிகிறார்கள். தொடர்ந்து பணிச்சுமை காரணமாக அவர்கள் வேலைப்பளுவில் ஈடுபட்டு வருவது தெரிகிறது.

பெண்கள் இந்த காலத்தில் தங்களுக்கு வருகிற நோய் நொடிகளை கூர்ந்து பார்ப்பது அவசியம். குறிப்பாக மார்பகப் புற்றுநோய் என்பது இது பரம்பரை நோய் அல்ல. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இந்த நோய் வர வாய்ப்புள்ளது. இதற்கு கூச்சமில்லாமல் அவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். அடுத்து மேமோகிராபி என்கிற பரிசோதனையும் செய்ய வேண்டும். 

 

Breast Cancer-Doctor explanation

 



குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள் குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு இந்த மார்பக புற்றுநோய் அதிகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகவே கண்டிப்பாக பணிபுரியும் பெண்கள் இந்த நோயிலிருந்து இருந்து மீளுவதற்கு பரிசோதனை மிக முக்கியம். ஆகவேதான் இன்றிலிருந்து மூன்று நாட்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் அவர்களின் பெண்களுக்கு மட்டுமே இந்த பரிசோதனை முகாம் நடத்துகிறோம். இது தொடர்ச்சியாக மாநிலம் முழுக்க நடத்தப்படும் " என்றார்.

பின்னர் குடும்ப நல மருத்துவர் சுமதி நம்மிடம் கூறும்போது "மார்பகப் புற்றுநோய் என்பது இப்போது மிகவும் கூடுதல் ஆகி விட்டது. அதற்கு காரணம் உணவு வகைகள் தான். அந்த உணவிலிருந்து தான் ஏற்படுகிற விளைவுகள் கிருமிகள் உருவாகி அது தங்குமிடமாக பல்வேறு நிலைகளில் இருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் திருமணமான பெண்கள் குழந்தைப்பேறு உள்ளவர்கள் குழந்தை பெற்றவுடன் மூன்று நான்கு மாதங்களில் தாய்ப்பால் நிறுத்துவது. இப்போது பேஷன் ஆகிப் போய்விட்டது.

 



அதற்கு காரணம் தாய்ப்பால் தொடர்ந்து கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என அவர்கள் நம்புகிறார்கள். அது உண்மையில்லை. ஒவ்வொரு தாய்மார்களும் தங்களது குழந்தைகளுக்கு தற்போதைய நிலையில் கூறுவதென்றால் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தாய்ப்பால் கொடுப்பது அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பெரும்பாலும் மார்பக புற்றுநோய் வராது"  என்றார். நவீன விஞ்ஞான யுகத்தில் கிருமிகளும் நோய்களும் வெவ்வேறு வகையான ஊடுருவலை நடத்திக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மார்பகப் புற்றுநோய் என்பது அதிகரிப்பதும் அதை தடுக்க வேண்டிய பயன் முறைகளையும் மருத்துவர்கள் கூறுவதும் நடந்து வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

100 ரூபாயில் மருத்துவப் புரட்சி; டாடாவின் மைல்கல் சாதனை  

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
100 rupees to cure cancer; Tata's milestone achievement

உலகில் மிகவும் கொடுமையான நோய்களில் ஒன்றாக கருதப்படுவது புற்றுநோய். தீர்க்க முடியாத அல்லது எளியோரால் சிகிச்சை எடுக்க முடியாத அளவிற்கு மிகக் கொடூரமானதாகக் கருதப்படுகிறது. விலை உயர்ந்த மாத்திரைகள், மருந்துகள், சிகிச்சை முறைகள் எடுத்துக் கொண்ட பிறகு அதிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். அதிலும் முதல் நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதிலிருந்து மீள்வது எளிது என்பவையெல்லாம் மருத்துவத் துறையின் கூற்றுகளாக இத்தனை வருடங்கள் இருந்து வருகிறது.

அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வசதிகள், புதிய கண்டுபிடிப்புகள் உலகை புதிய பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் நிலையில், மருத்துவத்துறையிலும் சில புதிய புரட்சிகள் அபரிமிதமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேன்சர் சிகிச்சைக்கு பல்லாண்டு காலமாகவே சிகிச்சைக்கான தீர்வு மற்றும் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களை குறைத்து உயிர் வாழ்தலை நீடிக்க வைப்பது போன்றவை மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய சவாலாக நீடித்து வந்தது.

இந்தியாவில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 14 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் ஒன்பது லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. உலகில் பல்வேறு மூலைகளிலும் புற்றுநோயை முற்றிலுமாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளுக்கான ஆய்வுகள் அனுதினமும் நடைபெற்று வருகிறது. இதுவரை அதற்கான முழு தீர்வு எட்டப்படவில்லை என்றே கூறலாம்.

100 rupees to cure cancer; Tata's milestone achievement

இந்நிலையில், மும்பையின் டாடா மெமோரியல் ஹாஸ்பிடல் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தனர். எலிகளை வைத்து நடைபெற்ற மருத்துவச் சோதனையில் அந்த மருந்து வெற்றியைக் கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் மீண்டும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளும் மருத்துவ முறைகளில் ஏற்படும் பக்க விளைவுகளை 50% குறைப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர் பிளஸ் சியூ என்ற அந்த மாத்திரை, இந்திய தர நிர்ணய ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த உடனே சந்தைகளில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும் குறிப்பிடத்தகுந்த விஷயமாக புற்றுநோய் மருத்துவம் என்றாலே விலை உயர்ந்தது என்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தானது நூறு ரூபாய் என்ற குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளதுதான்.

Next Story

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
cancer children fly in airplane with help of mime gopi

மெட்ராஸ், கபாலி, பைரவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் மைம் கோபி. இவர் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அதன் மூலம் பெற்ற பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடுவதாகச் சொல்லியிருந்தார். அதனடிப்படையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சென்னை அண்ணா நகரில் உள்ள தேன் மொழி நினைவு அறக்கட்டளை உதவியுடன் ‘வான் உலா’ எனப் பெயரிட்டு சென்னையில் இருந்து பெங்களூர் வரை அழைத்துச் சென்றுள்ளார். இதற்காக அக்குழந்தைகளுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர்களை நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் வழியனுப்பி வைத்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மைம் கோபி, “இங்க இருக்கிற எல்லா மக்களும் என்னுடைய மக்கள். அதனால் இது உதவி கிடையாது. கடமை. எனக்கு விமானத்தில் போக 30 வருஷம் மேல் ஆனது. இந்த வாய்ப்பு இந்த குழந்தைகளுக்கு எப்போது கிடைக்கும். அதை ஏன் கொடுக்கக்கூடாது. இன்னொருத்தரை சந்தோசப்படுத்தி பார்ப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. சந்தோஷம் எந்தளவிற்கு கூடுதோ ஆயுள் கூடும் என்பார்கள். ஆயுள் கூடுவதற்கு நன்றாக சிரிக்கணும். இந்த குழந்தைகள் நன்றாக சிரித்தாலே நோய் விட்டுப் போய்விடும்.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டு தான் இந்த உலா. விமானத்தில் முதல் தடவை பறக்கும் போது, நம்மை அறியாமல் பட்டாம்பூச்சி பறக்கும். இது வெறும் துவக்கம் தான். இன்னும் 3 மாதம் கழித்து இன்னொரு சூப்பரான விஷயத்தை பண்ணப் போகிறோம். பிறவியிலே பார்வையில்லாத, வாய் பேசாத, காது கேட்க முடியாத பிள்ளைகளை கூட்டிப் போக திட்டமிட்டிருக்கிறோம். அதையும் தாண்டி குழந்தைகளுக்கான நூலகம் ஆரம்பிக்கிறோம்” என்றோம்.