Skip to main content

அலுவலக பூட்டை உடைத்து வேட்புமனுக்கள் கிழிப்பு; திருவாரூர் பரபரப்பு

Published on 15/12/2019 | Edited on 15/12/2019

திருவாரூர் அருகே வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக பெறப்பட்ட வேட்புமனுக்களையும், வாக்காளர் பட்டியலையும் கிழித்து வீசப்பட்டிருக்கும் சம்பவம் திருவாரூர் மாவட்ட தேர்தல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தமிழகத்தில் கிராமபுற ஊராட்சிக்கான உள்ளாட்சி தேர்தலை வருகிற 27ம் தேதி மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டமாக நடத்துவதாக அறிவித்து, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல்கட்சிகள், கூட்டணிகட்சிகளுக்கான தொகுதி பங்கீடு  இழுபறி ஒருபுறம் இருக்க, இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை திங்கள் கிழமையோடு முடிவடைய உள்ளது.

 

Breaking the lock of the council hall and tearing down candidates forms; Thiruvarur


இந்தநிலையில், திருவாரூர் மாவட்டம் வடகண்டம் ஊராட்சியில் நேற்று சனிக்கிழமை வரை 27 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று ஞாயிற்றுகிழமை காலை வட கண்ட ஊராட்சி செயலாளர் கணபதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வந்தபொழுது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டும், மனுக்கள் கிழிக்கப்பட்டு வாசல் அருகில் கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்த பொழுது பெறப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் கிழிக்கப்பட்ட கழிவறையில் வீசப்பட்டிருப்பதையும், அதற்காக பெறப்பட்ட விண்ணப்ப கட்டணமான 1500 ரூபாயும் திருடப்பட்டிருப்பதையும் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

உடனடியாக இதுகுறித்து, தலமை அதிகாரிகளுக்கு கூறிவிட்டு குடவாசல் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பணத்திற்காக நடந்ததா, அல்லது தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடைபெற்றுள்ளதா என்பன உள்ளிட்ட கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அங்குள்ளவர்களிடம் விசாரித்தோம்," எங்கும் இல்லாத வகையில் அதிகமானோர் வார்டு உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களுக்குள் இருக்கும் ஈகோவே இந்த வேலையை செய்ய வைத்திருக்கிறது. மனுக்கள் முழுவதையும் கிழித்து விட்டனர். ஆனாலும் விவகாரம் வேறுவிதமாக மாறிவிடும் என்பதால் மனு கொடுத்தவர்களிடமே திரும்ப மனு வாங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர், அதோடு வேட்பாளர் பட்டியல் மட்டும் கிழித்துவிட்டதாக கூறுகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.