Skip to main content

சினிமா பாணியில் வீட்டை உடைத்து பொருட்களை லாரியில் கடத்தல்!

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் குளத்துப்பட்டியை  சேர்ந்தவர் மணிமாறன். இவர் கேபிள் டிவி நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். அதன் பின் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மணிமாறன் வீட்டிற்குள் சென்ற போது வீட்டிலுள்ள வீட்டு உபயோக பொருட்களான  கட்டில், மெத்தை, சோபா, பிரிட்ஜ், ஃபேன், மிக்ஸி, இன்வெர்ட்டர் என சகலமும் திருடப்பட்டு  வீட்டை துடைத்து வைத்தது போல் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை விட கொடுமை என்னவென்றால் பூஜை அறையில் இருந்த விநாயகர் படத்தை கூட கொள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. இது தொடர்பாக மணிமாறன் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

Breaking the house in cinematic style     Trafficking thief dindigul


இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மணிமாறன் வீட்டிலிருந்து திருடப்பட்ட பொருட்களில் ஒன்றான இணையதள மோடம் செயல்பட தொடங்கியுள்ளதை அறிந்து விசாரணை துரிதமாக மேற்கொண்ட போலீசார், நிலக்கோட்டை பொட்டி செட்டிபட்டியை சேர்ந்த பெருமாள், அவனது கூட்டாளியான சிலுக்குவார்பட்டி ரவி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 2.5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களை கைப்பற்றினர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.


இந்த கொள்ளை சம்பவத்தில், தொடர்புடைய ஆவாரம்பட்டியை சேர்ந்த சுப்புகாளையை போலீசார் தேடி வருகின்றனர். சூரியா படமான நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக கருணாஸ், நீதிபதி வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் திருடி லாரியில் ஏற்றி கொண்டு போவது போல் நடித்திருப்பார். அதேபோல் மணிமாறன் வீட்டில் திருடிய பொருட்களை எல்லாம் லாரியில் ஏற்றி லொடுக்கு பாண்டிகள் கொண்டு சென்று இருக்கிறார்கள். இப்படி  சினிமா பாணியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட லொடுக்கு பாண்டிகளிடமிருந்து  கொள்ளை பொருட்கள் அனைத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.