Skip to main content

மத்திய அரசுக்கு எதிராக துணிச்சலான முடிவுகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
THAMIMUN ANSARI


மாநில உரிமைகளை தமிழக அரசு மத்திய அரசிடம் விட்டு கொடுப்பதை தமிழக மக்கள் விரும்பவில்லை எனவும், மத்திய அரசிற்கு எதிராக துணிச்சலான முடிவுகளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல தமிழக அரசு எடுக்க வேண்டுமெனவும் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
 


கோவை உக்கடம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசியபோது,டிடிவி தினகரன் வீட்டின் முன் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வவியுறுத்தினார். 
 

 

 

மேலும் பேசிய அவர், 80 ஆண்டுகளாக பொதுவாழ்வில் உள்ளவரும், தமிழ் உலகின் சிறந்த அரசியல் தலைவருமான திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலைஞர் மீண்டு வர வேண்டுமென கட்சி சார்பற்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கலைஞர் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறோம்.
 

அதிமுக உடன் மரியாதை நிமித்தமான உடன்பாடு உள்ளது. தேர்தல் கூட்டணி தேர்தலோடு முடிந்து விட்டது. தமிழக அரசை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. அரசின் செயல்பாடுகளை பொறுத்து பாராட்டியும், விமர்சனத்தையும் செய்து வருகிறோம். 
 

 

 

பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதில் மத்திய அரசு ஆளுநரின் மூலமாக மறைமுகமாக தலையீடு இருக்கிறது. மாநில உரிமைகளை மத்திய அரசிடம் விட்டு கொடுப்பதை நாங்களும், தமிழக மக்களும் விரும்பவில்லை. மத்திய அரசிற்கு எதிராக துணிச்சலான முடிவுகளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல தமிழக அரசு எடுக்க வேண்டும். 
 

துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சகோதரருக்கு மருத்துவ சிகிச்சைக்கு இராணுவ ஹெலிகாப்டர் கொடுத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உதவியது போல, சாதரண மக்களுக்கும் உதவ வேண்டும். டெல்லியில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தது மத்திய அரசின் ஆணவத்தை காட்டுகிறது. இவ்வாறு கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

ம.ஜ.க.வின் தலைவராக தமிமுன் அன்சாரி பொறுப்பேற்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Tamimun Ansari took charge as the president of MJK

2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டுவந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு மாலையில், தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும், தமிமுன் அன்சாரி, கட்சி தலைவராக பொறுப்பேற்றார். மேலும், அவர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு மௌலா. நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பொருளாளராக ரிஃபாயீ, துணைத்தலைவராக மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளராக செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.