Skip to main content

திருச்சி கொள்ளைக்கு மூளை... யார் அந்த முருகன்?

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக் கடையான லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முகமூடி கொள்ளையர்களால் சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தற்போது மணிகண்டன் மற்றும் இந்த திருட்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுரேஷின் தாயாரான கனகவள்ளி ஆகியோர் நீதிமன்ற காவலில் 15 நாட்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

brain for Trichy robbery  ... Who is that Murugan!

 

சுரேஷ், மணிகண்டன் இருவர் மட்டுமல்லாமல் எட்டு பேர் மீது விசாரணையை துவக்கி 7 பேருக்கு வலைவீசியுள்ளது காவல்துறை. இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளைக்கு மூலதன தலைவனாக இருந்தது பிரபல கொள்ளையன் முருகன் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த திருட்டு சம்பவத்தில் தேடப்படும் சுரேஷின் மைத்துனர் தான் முருகன். இந்த  கொள்ளைக்கு திட்டம் தீட்டியது முருகன்தான் என்கிறது காவல்துறை.

நகை கொள்ளை தொடர்பான இணையதள தொடரைப் பார்த்து இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது எனவும், அந்த தொடரில் வருவதைபோலவே சுவரில் துளையிடுவது, ஜோக்கர், விலங்குகள் போன்ற முகமூடிகளை அணிந்து கொள்வது, பொருட்களை திருடிய பின்னர் லாவகமாக தப்பிப்பது என ஒவ்வொரு கட்டமும் இணையத் தொடரில்  வருவது போலவே உள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

யார் அந்த முருகன்?

 

brain for Trichy robbery  ... Who is that Murugan!

 

திருவாரூர் அருகே உள்ள சீராத்தோப்பை சேர்ந்த முருகன். ஆரம்பத்தில் சிறு சிறு  திருட்டுகளை ஆரம்பித்த முருகன் மீது தற்போது  கர்நாடகாவில் மட்டும் 180 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்திருக்கிறது. 2011ஆம் ஆண்டு கர்நாடக சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த முருகன் பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்று அவனது கைவரிசையை தொடர்ந்திருக்கிறான். அதன்பிறகு போலீசாரிடம் சிக்காத முருகன் சொந்த ஊரான சீர்தோப்புக்கு சென்று அங்குள்ள உறவினர்கள், ஏழைகள் என தான் கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதியை தானமாக செலவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளான். துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் என கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வள்ளலாக வாழ்ந்துள்ளான் முருகன்.

 

POLICE

 


மேலும் மாற்றுக் திறனாளிகள் இருவரைப் தத்தெடுத்து முருகன் வளர்த்து வருவதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு காப்பகம் ஆரம்பித்ததாகவும் அந்த பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர். முருகனால் ஆரம்பிக்கப்பட்ட அந்த காப்பகம் போலீசாரால் சீல் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  வள்ளல், மாற்றுத்திறனாளிகளுக்கு காப்பகம் என அவதாரம் எடுத்த முருகனின் அடுத்த ஆசை  சினிமா, திரைப்படத்தை எடுத்து சினிமாவிலும் கால் பதிக்க ஆசைப்பட்டிருகிறான் முருகன்.  அதற்காக 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் பாலமுருகன் புரொடக்சன்ஸ் என்ற சினிமா கம்பெனியை தொடங்கிய முருகன் ''மனாசா வினாவா'' என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்த தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

 

POLICE

 

அந்த படத்திற்கு கதாநாயகிக்கு மட்டும் 6 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளான். தற்போது இந்த திருட்டில் தேடப்பட்டு வரும் தனது அக்காள் மகனான சுரேசை அந்த படத்தில் ஹீரோவாக  நடிக்க வைத்துள்ளான். ஆனால் அந்த படம் வெளியாகாத நிலையில் மீண்டும் திருட்டு, கொள்ளை என ஈடுபட்டு சிறை சென்றான். 

 

POLICE

 

அதன்பிறகு வெளியேவந்த முருகன் ''ஆத்மா'' என்ற மற்றொரு படத்தை தயாரிக்கும் பணியில் இறங்கினான். இப்படி வள்ளல், சினிமா தயாரிப்பாளர், ஊனமுற்றோருக்கான காப்பகம் என இருந்த முருகன் தற்போது குணப்படுத்த முடியாத நோயின் பிடியில் சிக்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ வசதிகளுடன் கட்டமைக்கப்பட்ட  ஒரு வேனில் முருகன் ஒவ்வொரு ஊராக செல்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. வேனில் வாழ்ந்து வரும் முருகனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளது.




 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.