Skip to main content

தஞ்சையில் ஆளுநருக்கு கருப்பு கொடி... இருளில் தவிக்கும் விவசாயிகள் குடும்பத்துடன் கைது-பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு மேலையூர் யாதவர் தெருவிற்கான மின்சார இணைப்புகள் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜாபுயல் தாக்குதலால் மின்கம்பங்கள் விழுந்து சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அதனை சீர்படுத்தப்படாமல் இருளிலேயே விவசாயக் குடும்பங்கள் வாழ்ந்து வரும் கொடுமை தொடர்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, மின்சார துறை, காவல்துறையினர் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. வருவாய்துறை மூலம் நில அளவை செய்து சாலை ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய கம்பங்கள் அமைத்து மின் இணைப்பு கொடுக்க மின்சார வாரிய தலைவரும் சிறப்பு அனுமதி வழங்கி பணி துவங்கிய நிலையில் தனிநபர் சிலரை துண்டி விட்டு ஆளும் கட்சியினர் சிலர் செய்யும் பழிவாங்கும் நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் துணை போவதால் மின் இணைப்பும் வழங்காமல், சாலை போக்குவரத்து இன்றி ஒரு வருட காலமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

kaja

 

தூர் வாரும் பணிகளில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தட்டிக் கேட்கும் விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் மீது ஆளும் கட்சியினர் சிலரின் தூண்டுதலால் கொலை வெறி தாக்குதலும் நடத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் மேற்க்கொள்ளப்பட்டு பலரின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதோடு, சிறையிலும் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் ஆளும் கட்சி பிரமுகர்களின் அச்சுறுத்தலால் சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய மாவட்ட நிர்வாகம் தயக்கம்காட்டி வருவதோடு, மின்சாரம்  கொடுக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்திற்கு நெருக்கடி தருவதாக உயர் அதிகாரியே தெரிவிப்பது வேதனையளிக்கிறது.

எனவே இதனை கண்டித்தும், தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கி இயற்க்கை சீற்றங்கள் ஏற்ப்படும் நிலையில் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பின்றி பாதிக்கும் வேலையில் தீபாவளி நெருங்கி வரும் வேலையில் உடன் மின் இணைப்பு வழங்கி, சாலை அமைத்து வெளிச்சம் கொடுத்து விவசாயக் குடும்பங்களை பாதுகாத்திட வலியுறுத்தி இன்று (22ம்) தேதி தஞ்சாவூர் வருகை தர உள்ள மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்புக் கொடி காட்டி நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்தினை நடத்திட பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் சார்பில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் அறிவித்து தீவிரமாக ஏற்பாடுகள் செய்துவந்த நிலையில் மின் இணைப்பு கொடுக்க மறுத்து மக்களை யாருக்காகவோ அஞ்சி இருளிலே தவிக்க விட்டு உயிருக்கு பயந்து ஓர் ஆண்டு காலமாக போராடி வரும் மக்களுக்கு மின் இணைப்பு கொடுக்க மறுக்கும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்களின் செயல் மனிதநேயமற்ற செயல் மட்டுமின்றி வன்மையாக கண்டிக்கத்தக்கதுமாகும்.
 

kaja

 

மேலும் இருளிலே வாழும் குடும்பங்களுக்கு உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமேயானால் மாவட்ட ஆட்சியரே பொருப்பேற்க வேண்டும்.

இந்நிலையில் தீபாவளி நெருங்கி வரும் நிலையில் மின் இணைப்பு கொடுக்க வேண்டிய ஆட்சியர் மனிதாபிமானமற்ற முறையில் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்து வந்த விவசாயிகளையும் மண்டல தலைவர் என்.அண்ணாத்துரை மாவட்ட செயலாளர் எம்.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையை தூண்டி விட்டு நள்ளிரவில் கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும் நாஞ்சிக் கோட்டையிலிருந்து புறப்பட்டு பைபாஸ் சாலை நோக்கி மாவட்ட துணை செயலாளர் வி.எஸ்.வீரப்பன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள்  தங்களது வாகனங்களில் வந்த குடும்ப பெண்கள், குழைந்தைகளோடு கருப்புக்கொடி காட்ட  வந்தவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்து திருமண மண்டபங்களிலும்,காவல் நிலையங்களினும் அடைத்துள்ளனர். இதனால்
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பறிதவித்து வருகின்றனர்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடன் தலையிட்டு கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்வதோடு, உடன் மின் இணைப்பு வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு விளக்கேற்றி உயிருக்கும், வாழ்க்கைக்கும் உத்திரவாதமளித்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன் இவ்வாறு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.