Skip to main content

பாகப்பிரிவினை செய்த சில மணி நேரத்தில் குளத்தில் சடலமாக மிதந்த சிறுவர்கள்... போலீசார் விசாரணை!

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

Boys floating in the pool within hours of parting!

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கற்பூரசுந்தரேசுவர பாண்டியன். இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இவரது மகன்கள் நிவாஷ் பாண்டி (வயது 6), ரித்திஷ் பாண்டி (வயது 4) ஆகிய இருவருடன் 4 சகோதரர்களுடன் ஒரே குடிசையில் வசித்து வருகிறார். தான் வெளியூர் வேலைக்கு சென்றால் தனது மகன்களை தனது சகோதரர்கள் பாதுகாப்பில் விட்டு செல்வது வழக்கம்.

 

நேற்று திங்கள் கிழமை கற்பூரசுந்தரேசுவர பாண்டிக்கும் அவரது சகோதரர்களுக்கும் பாகப்பிரிவினை நடந்துள்ளது. அப்போது காரசாரமாகப் பேசிக் கொண்டுள்ளனர். அதன் பிறகு சிறுவர்களைக் காணவில்லை. அவரது ஒரு சகோதரர் குளத்திற்கு குளிக்கச் சென்றதாகவும் தான் குளிக்கச் சென்ற போது பின்னால் வந்த சிறுவர்களை வீட்டிற்கு போகச் சொல்லிவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு சிறுவர்களைக் காணவில்லை. வீட்டிற்குச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் வீட்டிற்கும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

 

அதன் பிறகு எங்கு தேடியும் கிடைக்காததால் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். தொடர்ந்து உள்ளூர் இளைஞர்கள் பல குளங்களில் இறங்கித் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் வீட்டு வாசலில் உள்ள குளத்தில் இளைஞர்கள் தேட வரும் போது நாங்கள் தேடிப் பார்த்துவிட்டோம் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்.

 

Boys floating in the pool within hours of parting!

 

இந்நிலையில் இன்று செவ்வாய்க் கிழமை மதியம் காணாமல் போன இரு சிறுவர்களும் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் சடலமாக மிதந்தது கண்டு அதிர்ந்த கிராமத்தினர் சிறுவர்களின் சடலங்களை மீட்கப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறுவர்கள் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். சிறுவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. சம்பவம் குறித்து அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் விசாரணை செய்து வருகிறார்.

 

குளக்கரையில் திரண்டிருந்த உறவினர்கள் இதுகுறித்து கூறும் போது.. 'சிறுவர்கள் எப்போதும் குளத்தில் குளிக்கப் போகமாட்டார்கள். கடந்த வாரம் கனமழை பெய்து இவர்கள் குடிசை வழியாக தண்ணீர் சென்று தான் எதிரே உள்ள குளம் நிரம்பியது. அப்போது போகாதவர்கள் இன்று எப்படி போனார்கள் என்பது தெரியவில்லை. மேலும் பாகப்பிரிவினை நடந்து சிறிது நேரத்தில் சிறுவர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். கன்னத்தில் கீறல் காயங்களும் தெரிவதால் சிறுவர்களாகக் குளத்தில் தவறி விழுந்தார்களா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்குமா என்று போலீசார் தான் தீர விசாரிக்க வேண்டும்'' என்றனர்.

 

போலீசாரோ 'பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்கு பிறகே சிறுவர்கள் இறப்பிற்கான முழுமையான காரணம் தெரிய வரும்' என்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.