Skip to main content

பாகப்பிரிவினை செய்த சில மணி நேரத்தில் குளத்தில் சடலமாக மிதந்த சிறுவர்கள்... போலீசார் விசாரணை!

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

Boys floating in the pool within hours of parting!

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கற்பூரசுந்தரேசுவர பாண்டியன். இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இவரது மகன்கள் நிவாஷ் பாண்டி (வயது 6), ரித்திஷ் பாண்டி (வயது 4) ஆகிய இருவருடன் 4 சகோதரர்களுடன் ஒரே குடிசையில் வசித்து வருகிறார். தான் வெளியூர் வேலைக்கு சென்றால் தனது மகன்களை தனது சகோதரர்கள் பாதுகாப்பில் விட்டு செல்வது வழக்கம்.

 

நேற்று திங்கள் கிழமை கற்பூரசுந்தரேசுவர பாண்டிக்கும் அவரது சகோதரர்களுக்கும் பாகப்பிரிவினை நடந்துள்ளது. அப்போது காரசாரமாகப் பேசிக் கொண்டுள்ளனர். அதன் பிறகு சிறுவர்களைக் காணவில்லை. அவரது ஒரு சகோதரர் குளத்திற்கு குளிக்கச் சென்றதாகவும் தான் குளிக்கச் சென்ற போது பின்னால் வந்த சிறுவர்களை வீட்டிற்கு போகச் சொல்லிவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு சிறுவர்களைக் காணவில்லை. வீட்டிற்குச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் வீட்டிற்கும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

 

அதன் பிறகு எங்கு தேடியும் கிடைக்காததால் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். தொடர்ந்து உள்ளூர் இளைஞர்கள் பல குளங்களில் இறங்கித் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் வீட்டு வாசலில் உள்ள குளத்தில் இளைஞர்கள் தேட வரும் போது நாங்கள் தேடிப் பார்த்துவிட்டோம் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்.

 

Boys floating in the pool within hours of parting!

 

இந்நிலையில் இன்று செவ்வாய்க் கிழமை மதியம் காணாமல் போன இரு சிறுவர்களும் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் சடலமாக மிதந்தது கண்டு அதிர்ந்த கிராமத்தினர் சிறுவர்களின் சடலங்களை மீட்கப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறுவர்கள் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். சிறுவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. சம்பவம் குறித்து அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் விசாரணை செய்து வருகிறார்.

 

குளக்கரையில் திரண்டிருந்த உறவினர்கள் இதுகுறித்து கூறும் போது.. 'சிறுவர்கள் எப்போதும் குளத்தில் குளிக்கப் போகமாட்டார்கள். கடந்த வாரம் கனமழை பெய்து இவர்கள் குடிசை வழியாக தண்ணீர் சென்று தான் எதிரே உள்ள குளம் நிரம்பியது. அப்போது போகாதவர்கள் இன்று எப்படி போனார்கள் என்பது தெரியவில்லை. மேலும் பாகப்பிரிவினை நடந்து சிறிது நேரத்தில் சிறுவர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். கன்னத்தில் கீறல் காயங்களும் தெரிவதால் சிறுவர்களாகக் குளத்தில் தவறி விழுந்தார்களா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்குமா என்று போலீசார் தான் தீர விசாரிக்க வேண்டும்'' என்றனர்.

 

போலீசாரோ 'பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்கு பிறகே சிறுவர்கள் இறப்பிற்கான முழுமையான காரணம் தெரிய வரும்' என்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சந்தேகத்தின் பேரில் ஓட ஓட விரட்டி ஒருவர் வெட்டிக் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Suspect chased away a person  incident

அரியலூர் மாவட்டம் குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(45). இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். விவசாயியான மனோகரன் விவசாய பணிகளுக்காக டிராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின் போன்றவற்றை விலைக்கு வாங்கி வைத்துள்ளார். தனது சொந்த வேலைகள் போக அப்பகுதியில் உள்ள கிராம விவசாயிகளுக்கும் தனது ட்ராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின்களை வாடகைக்கு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது விவசாய ட்ராக்டரை ஓட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை பணிக்கு அமர்த்தியுள்ளார். ரமேஷ்க்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார் மனோகரன். ரமேஷும் வீட்டில் இருந்தபடியே மனோகரனுக்கு உதவியாக அவரது விவசாய வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், தனது வீட்டில் தங்கியிருக்கும் ரமேஷுக்கும், தனது மனைவி புஷ்பவள்ளிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். நாளடைவில் மனோகரனுக்கு இருக்கும் சந்தேகம் அதிகமான நிலையில் நேற்று விவசாய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கையில் அரிவாளுடன் காத்திருந்த மனோகரன் ரமேஷை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரிவாளுடன் வெங்கனூர் காவல் நிலையத்தில் மனோகரன் சரணடைந்துள்ளார். இதனிடையே ரமேஷின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; அதிமுக நகர செயலாளர் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 AIADMK official who cheated by promising to get a job was passed away
வெங்கடேசன்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அதிமுக நகர  செயலாளராக  வெங்கடேசன் என்பவர் கட்சி பதவி வகித்து வருகிறார். இவரிடம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் எஸ்.பி.ஐ வங்கி எதிரில் டீக்கடை நடத்திவரும் ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி கல்பனாவுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை கேட்டு கடந்த அதிமுக ஆட்சியில் 3 லட்சம் பணம் தந்துள்ளார். வேலை வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது.

ராஜேந்திரன், கல்பனா இருவரும் பலமுறை அவர் வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். இதற்கிடையே கல்பனா வெங்கடேசன் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இது ராஜேந்திரன் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெங்கடேசன் - ராஜேந்திரன் இடையே முன்விரோதம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் மார்ச் 16 ஆம் தேதி இரவு வெங்கடேசன் வங்கியில் ஏ.டி.ம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் வெங்கடேசனிடம் பிரச்சனை செய்துள்ளனர். அப்போது ராஜேந்திரன் கல்லை எடுத்து வெங்கடேசன் தலையில் பலமாக தாக்கியதில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட வெங்கடேசன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் கல்லால் தலையில்  தாக்கியதில் பலத்த ரத்த காயம் அடைந்த வெங்கடேசனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மார்ச் 17 ஆம் தேதி உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பெயரில் செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ராஜேந்திரனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து  வழக்கு பதிவு செய்த செஞ்சி போலீசார் ராஜேந்திரன்  மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் மீது கொலை  வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி கல்பனாவை செஞ்சி போலீசார் தனிப்படை அமைத்து  தேடி வருகின்றனர்.அதிமுக செஞ்சி நகர கழக செயலாளர் கொலையால் செஞ்சி பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அதிமுக நிர்வாகிகளிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.