ADVERTISEMENT

“உன்னையே நம்பியிருக்கும் என்னை நீ கைவிட்டு விடக்கூடாது”-வற்புறுத்திய காதலியை அடித்துக்கொலை செய்த காதலன்! 

04:35 PM Sep 23, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெரம்பலூர் மாவட்டம், அ.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா(43). சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து போய்விட்டார். இவரது மகன், மகள் ஆகிய இருவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். புஷ்பா தனது தாய் பெருமாயி என்பவருடன் மேட்டூரில் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் புஷ்பா கடந்த 7ஆம் தேதி அரும்பாவூர் வரை சென்று வருவதாகத் தனது தாய் பெருமாயிடம் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மகள் வீட்டுக்கு வரவில்லையே என்று தவித்துப் போன தாய் பெருமாயி தனது மகள் புஷ்பாவை பல்வேறு இடங்களுக்கும் சென்று தேடிப் பார்த்துவிட்டு அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் புஷ்பாவை பல்வேறு இடங்களில் தேடிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அன்னமங்கலம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் அறிந்த போலீசார் அன்னமங்கலம் காட்டுப்பகுதிக்குச்சென்று அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றினர். மேலும் தனது மகள் புஷ்பாவை காணவில்லை என்று தங்களிடம் புகார் அளித்த பெருமாயியை அழைத்துச் சென்று அந்த உடலைக் காட்டியுள்ளனர். அது காணாமல் போன தனது மகள் புஷ்பா தான் என்று அடையாளம் காட்டியுள்ளார் பெருமாயி. இதையடுத்து புஷ்பாவின் கொலை குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையின் மூலம் புஷ்பாவின் ஊரான மேட்டூரை சேர்ந்த 45 வயது சோலைமுத்து என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவருக்கும் கணவர் இல்லாமல் இருந்து வந்த புஷ்பாவுக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அன்னமங்கலம் வனப்பகுதியில் சோலைமுத்து மற்றும் புஷ்பாவும் சந்தித்துள்ளனர். அப்போது புஷ்பா, சோலைமுத்துவிடம் உன்னையே நம்பியிருக்கும் என்னை நீ கை விட்டு விடக்கூடாது, எனவே நீ என்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். திருமணத்திற்கு மறுத்துள்ளார் சோலைமுத்து. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றி உள்ளது. கடும் கோபத்தில் சோலைமுத்து புஷ்பாவை கல்லால் அடித்துக்கொலைசெய்து அந்த இடத்திலேயே போட்டுவிட்டு புஷ்பா வைத்திருந்த 25ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்து உள்ளார் சோலைமுத்து. அவரை போலீசார் தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர். காதலியைக் கொலை செய்து போட்டு விட்டுச் சென்ற காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT