Skip to main content

காதலனை ஆள்வைத்து கடத்திய காதலி கைது... பின்னணியில் திடுக்

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

சென்னை திருவல்லிகேணியை சேந்தவர் வாசவி. டென்னிஸ் வீராங்கனையான இவர் அமெரிக்காவில் டென்னிஸ் பயிற்சி பெற்றுவருகிறார். அதேபோல் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.

 

 boyfriend kidnapped by lover...

 

வாசவியும் கீழ்பாக்கத்தை சேர்ந்த நவீத் அகமதுவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் வாசவியை பைக்கில் அழைத்துச் சென்ற நவீத் அவரை சேத்துப்பட்டு பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு சென்றபோது பைக்கில் சென்ற நவீத்தை அடையாளம் தெரியாத சில நபர்கள் கடத்தியதாக கூறப்படுகிறது.

 

அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்த நவீத் டிபி.சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னை கடத்திய அந்த கும்பல் தன்னிடம் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணமில்லை என்றவுடன் தனது ஐபோன், கைக்கடிகாரம் ஆகியவற்றை பறித்து சென்றதாகவும் கூறியிருந்தார்.

 

 boyfriend kidnapped by lover...

 

இதுதொடர்பாக டிபி.சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பட்ட அந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டதின் அடிப்படையில் வேளச்சேரியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் சரவணன் என்ற இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

 

police

 

அந்த இரண்டு பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் சொன்ன தகவல் போலிசாருகே அதிர்ச்சியை தரும் வகையில் இருந்தது. அதாவது நவீத்தின் காதலியும், டென்னிஸ் வீராங்கனையுமான வாசவிதான் நவீத்தை கடத்த சொன்னார் என அந்த இரு இளைஞர்களும் கூற அதிர்ந்த போலீசார் டென்னீஸ் வீராங்கனை வாசவியை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர்.

 

police

 

இதுதொடர்பாக வாசவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த வழக்கு முற்றிலும் திசை திரும்பியது, அதாவது சமீப காலமாக நவீத்க்கும்  எனக்கு இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தது இதனால் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. தாங்கள் நெருக்கமாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட இருப்பதாக நவீத் மிரட்டல் விட்டார் என கூறியுள்ளார். காதல் விவகாரம் என்பதால் கண்டித்து அனுப்பிவிட வெளிநாடு தப்பி செல்லமுயன்ற வசாவியை போலீசார் கைது செய்தனர்.

 

police

 

 

police

 

அவர் மட்டுமின்றி இந்த கடத்தலில் ஈடுபட்ட சரவணன், பாஸ்கர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட பாஸ்கர் வடபழனி மகளிர் காவல்நிலைய தலைமை காவலரின் மகன் என்பதும், புத்தாண்டு கொண்ட்டாட்டத்தில் சாலையில் இருந்த பேரி கார்டை பைக்கில் அமர்ந்தபடி நடு சாலையில் தீப்பொறி பறக்க இழுத்து சென்றவர் என்றும் தெரியவந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.