Skip to main content

பஜார் கடையில் 10 ஆயிரம் பணம் திருடிய சிறுவன்;காட்டி கொடுத்த சிசிடிவி ;அதிர்ந்த போலிஸார்!!

Published on 14/09/2018 | Edited on 14/09/2018

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாமணி மனைவி 55 வயது சரஸ்வதி. இவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் சரஸ்வதி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். செப்டம்பர் 13ந்தேதி இரவு வழக்கம்போல் மருத்துவமனைக்கு பணிக்கு சென்றுள்ளார்.

 

robber

 

இன்று செப்டம்பர் 14ந்தேதி காலை 9 மணிக்கு பணி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 20 சவரன் தங்க நகைகள், பத்து பட்டு புடவைகள், 2 வெள்ளி கிண்ணம், மற்றும் 2 வெள்ளி குத்துவிளக்குகள், மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தள்ளார். 

 

இதுக்குறித்து சரஸ்வதி ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்க்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் கிராமிய போலீசார் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் சரஸ்வதியிடம் புகார் எழுதி வாங்கினர். அதன்பின்னர் தடய அறிவியல் துறையினர் அங்கு வந்து திருட்டு நடந்த வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்து எடுத்துக்கொண்டனர். போலிஸார் திருடிய அந்த திருடன்களை தேடி வருகின்றனர். 

 

robber

 

வாணியம்பாடி நகரில் ஸ்டேஷனரி கடை வைத்து நடத்திவருபவர் சதிஷ். செப்டம்பர் 13ந்தேதி இரவு 8.30 மணிக்கு சிறுநீர் கழிக்க சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது கடையின் கல்லா பெட்டியில் இருந்த பணம் 10 ஆயிரம் காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார். கடையில் பாதுகாப்பாக பொருத்திவைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது, கடையில் யாரும்மில்லை என தெரிந்துக்கொண்டு 15 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் கடையில் கல்லாவை திறந்து அதிலிருந்த பணம் 10 ஆயிரத்தை திருடி செல்வது கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை எடுத்துச்சென்று காவல்நிலையத்தில் புகார் தர, அக்கம் பக்கம் கடைகள் இருக்கும் நிலையில், சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ளபோதே தைரியமாக அந்த சிறுவன் திருடிச்சென்று போலிஸாரை அதிரவைத்தது. வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை போலிஸார் தேடிவருகின்றனர்.

 

வேலூர் மாவட்டத்தில் திருடுகள் தொடர்ச்சியாக நடந்துவருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.