Skip to main content

நழுவிய சோப்பை எடுக்கச்சென்ற சிறுவன் சுழலில் சிக்கி பரிதாப பலி...

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

The boy who went to fetch the slippery soap got stuck in the mud and died miserably.
                                                           சபரிகணேஷ்


விருதுநகர் மாவட்டம், கன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தியேன். இவர் தனது மனைவி பேச்சி செல்வி, மகன்களான சபரிகணேஷ் (9), அபினேஷ் (7) ஆகியோருடன் கோவையில் வசித்துவருகிறார். கார்த்தியேன் தனியார் மில்லில் பணிபுரிந்து வருகிறார். 

 

மனைவி பேச்சி செல்வியின் பெற்றோர்கள் நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி அருகில் உள்ள பரப்பாடி வேப்பங்குளத்தில் வசித்து வருகின்றனர். எனவே, கரோனா விடுமுறையால், தாத்தா வீட்டிற்குப் பேரன்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே வந்திருக்கின்றனர். 

 

சென்ற வாரம் பெய்த தொடர் மழை காரணமாக, அங்குள்ள குளத்தில் தண்ணீர் நிரம்பியிருக்கிறது. அங்கே சிறுவர்கள் இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர். குளத்தின் தண்ணீர் மடை செல்லும் கட்டுமானத்தின் மீது அமர்ந்தபடி சிறுவன் சபரிகணேஷ் துணிக்கு சோப்பு போட்டிருக்கிறான். கை நழுவி சோப்புக்கட்டி தண்ணீரில் விழ, அதை எடுப்பதற்காக நீச்சல் தெரிந்த சபரிகணேஷ் குளத்தில் குதித்திருக்கிறான். ஆனால் திறக்கப்பட்ட மடையின் தண்ணீர் சுழலில் சிக்கிய சிறுவன், மடையில் அடிப்பகுதியில் மாட்டிக் கொண்டான். 

 

இதைக் கண்டு தம்பி அபினேஷ் கூச்சலிட்டு அழுதிருக்கிறான். சத்தம் கேட்டு அருகிலுள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்து சிறுவனைத் தேடியுள்ளனர். ஆனால், அவர்களால் அச்சிறுவனை சடலமாகத்தான் மீட்க முடிந்தது. தற்செயலாக வேப்பங்குளம் வந்த தந்தை கார்த்திகேயன் மகனின் உடலைப் பார்த்துக் கதறியழுதிருக்கிறார். சிறுவனின் பரிதாபச் சாவு கிராமத்தையே உலுக்கியிருக்கிறது.

 

சம்பவ இடத்திற்கு வந்த விஜயாநாராயணம் போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கங்கை நதியில் நடந்த பரிதாபம்!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
life of a boy who lost his life in the river Ganges due to superstition

டெல்லியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவருக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவனின் பெற்றோர் மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் ரத்தப் புற்றுநோய் அபாய கட்டத்தை எட்டியுள்ளதால் இனிமேல் சிறுவனைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாமல் கவலையில் பெற்றோர்கள் இருந்துள்ளனர். சிறுவனின் பெற்றோருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறுவனை, புனித நதியாக நம்பப்படும் கங்கை நதியில் நீராட வைத்தால் புற்றுநோய் குணமாகிவிடும் என்று அவரது பெற்றோர்கள் நினைத்தனர். அதன் காரணமாகச் சிறுவனை டெல்லியிலிருந்து ஹரித்துவாருக்கு அழைத்து வந்து அங்குள்ள கங்கை நதியில் நீராட வைத்துள்ளனர். பொதுவாக வட மாநிலங்களில் இது கடும் குளிர்காலம் என்பதால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது.

ad

இந்த நிலையில், ஏற்கனவே புற்றுநோயால் உடல்நிலை மோசமாக உள்ள சிறுவனை அழைத்து வந்து கங்கை நதியில் நீராட வைத்துள்ளனர். சிறுவனின் தலையை நீரில் மூழ்க வைத்துவிட்டு அவரது பெற்றோர்கள் பிரார்த்தனை செய்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், சிறுவனின் தலையை தண்ணீரிலிருந்து வெளியே எடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்கள் அருகில் இருந்தவர்களிடம் சண்டை போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் அருகில் இருந்தவர்களே சிறுவனை தண்ணீரிலிருந்து எடுத்து கரைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுவன் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றோர்களின் அதீத மூடநம்பிக்கையால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய சிறுவன்!

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
boy who threatened the girl with film

விருதுநகர் மாவட்டம் – திருத்தங்கல்லைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டியுள்ளார். சிறுவனும், 36 வயதுள்ள பெண்ணும் அடுத்தடுத்த வீட்டில் குடியிருந்து வருகிறார்கள். அந்தப் பெண் தனது வீட்டு பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த போது, 17 வயது சிறுவன் பாத்ரூமின்  மேல்பகுதியிலிருந்து செல்போனில் படம் பிடித்திருக்கிறார். தன் மீது  செல்போன் வெளிச்சம் விழுந்தவுடன் அந்தப் பெண் சந்தேகத்துடன் மேலே  பார்த்திருக்கிறார். உடனே அந்த சிறுவன் மறைந்துகொண்டார்.

பாத்ரூமிலிருந்து சேலையை உடுத்திக்கொண்டு அந்தப் பெண் வீட்டுக்கு  வெளியே வந்து சிறுவனை அழைத்துக் கேட்டபோது, தகாத வார்த்தையால்  பேசியதோடு சேலையைப் பிடித்தும் இழுத்திருக்கிறார்.

மேலும், “நீ  குளிக்கும்போது நான் செல்போனில் படம் பிடித்ததை வெளியில் சொன்னால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டியிருக்கிறார். அந்தப் பெண் உறவினர்களிடம் கலந்து பேசிவிட்டு திருத்தங்கல் காவல்நிலையத்தில் புகாரளிக்க, அந்த சிறுவன் மீது வழக்கு பதிவாகியிருக்கிறது.