Advertisment

சங்ககிரியில் ரயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம்

Boy gets electrocuted after boarding train in Sangakiri

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயத்துடன் மீட்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சேலம் மாவட்டம் சங்ககிரி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது சிறுவன் ஒருவன் எறியுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின்சாரம் பாய்ந்து சிறுவன் தூக்கி வீசப்பட்டான். விசாரணையில் அந்த சிறுவன் சங்ககிரி ஆர்எஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் (13 வயது) என்பது தெரியவந்தது. படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவனை ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
incident Train sangakiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe