Skip to main content

குத்துசண்டை போட்டியில் மாநில அளவில் தொடர்ந்து மூன்று முறை முதல் இடம்... மாணவிக்கு உபகரணங்கள் வழங்கி மகிழ்வித்த சமூக ஆர்வலர்கள்!

Published on 22/03/2020 | Edited on 22/03/2020

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த சுரேஷ், மணிமொழி தம்பதியின் மகள் சுபாஷினி(14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். 
 

இவரது தந்தை கொத்தனார் வேலை செய்பவர் மதுபழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்தை கவனிப்பது இல்லை. இந்நிலையில் அவரது அம்மா பிள்ளைகளை வளர்ப்பதற்கு தெருவில் இட்லி கடை வைத்து அதில் கிடைக்கும் சொற்ப வருவாயில் குடும்பத்தை கவனித்து வருகிறார்.
 

இந்தநிலையில் சுபாஷினி பள்ளி படிப்பை தாண்டி விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். அப்போது கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் பயிற்சியாளர் சத்தியராஜ் மாணவர்களுக்கு கராத்தே சொல்லி கொடுக்கும்போது வேடிக்கை பார்த்த சுபாஷினியிடம் கராத்தே வகுப்பிற்கு வருகிறாயா என்றதும் அடுத்த நாளே கராத்தேவில் சேர்ந்து நல்லமுறையில்  கற்று கருப்பு பெல்ட் வாங்கியுள்ளார்.

 Boxing matchup statewide  First place three times in a row

இதனை தொடர்ந்து மாணவியின் திறமையை அறிந்த பயிற்சியாளர் அவரை குத்துசண்டை பயிற்சியில் ஈடுபடுத்தினார்.அதிலும் நல்லமுறையில் பயின்று மாவட்ட அளவில் முதல் இடத்தில் வென்று பின்னர் 2017, 2018, 2019- ஆண்டுகளில் நடைபெற்ற மாநில அளவிலான குத்து சண்டை போட்டியில் தொடர்ந்து மூன்று முறை  முதல் இடம் பிடித்து பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
 

குத்துசண்டை விளையாட்டில் நல்ல பெர்பாமான்ஸ் செய்கிறார். ஏழ்மை நிலையின் காரணமாக அவருக்கு சரியான சத்தான உணவு இல்லை. குத்து சண்டை விளையாட்டு பயிற்சியில் பயன்படுத்தப்படும் பல பொருட்களை அவர் இதுவரை பார்த்திருக்கமாட்டார். நான் சிலரிடம உதவி பெற்று என்னால் முடிந்த கையுறைகள் (GLOOVES) உள்ளிட்ட சில பொருட்களை வாங்கி கொடுத்துள்ளேன். 


அவரது மன உறுதியால் தொடர்ந்து வெற்றி பெருகிறார். தற்போது முதல்வர் கோப்பை குத்துசண்டை போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். இதனைதொடர்ந்து தேசிய அளவில் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் கடுமையான பயிற்சி செய்ய வேண்டும். அதற்கான எந்த உபகரணமும் அவரிடம் இல்லை. இந்த ஏழை மாணவிக்கு உதவி செய்ய யாராவது இருந்த சொல்லுங்க என்று அவரது நண்பர் செந்தில்குமார் மூலம் கூறியுள்ளார் பயிற்சியாளர்.

 Boxing matchup statewide  First place three times in a row

இதனையறிந்த சீர்காழியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெக.சண்முகம் மற்றும் அவரது மகள் யாமினிஅழகுமலர் அவரது நண்பர்களிடம் இந்த தகவலை கூறியவுடன் சாருமதி, அனுபம்ஸ்ருதி இரு நண்பர்கள் மூலம் தலா 10 ஆயிரம் பெற்று சென்னையில் உள்ள நண்பர்கள் உதவியுடன் ரூ. 20, 300- க்கு குத்துசண்டைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி அந்த மாணவிக்கு வழங்கினர். மேலும் சிலர் ட்ரைபுரூட், குத்துசண்டை ஜாக்கிட் என ரூ 5 ஆயிரத்தில் வாங்கி கொடுத்தனர். இது பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

பொருட்களை பெற்றுகொண்ட மாணவி இதிலுள்ள பல பொருட்களை நான் பார்த்தது கிடையாது என் நிலமை அறிந்து உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறி கண்கலங்கினார். நான் ஒலிம்பி போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெருவேன் என்றார். அப்போது இனி வரும் காலங்களில் நண்பர்களின் உதவியால் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி கூறினார் யாமினி.
 

மாணவின் அம்மா, "என் பிள்ளைக்கு சில நேரத்தில் ஷூ, சாக்ஸ் வாங்க காசு இருக்காது எங்க தெருக்களில் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் பயன்படுத்தியதை வாங்கி வந்து கொடுத்து பள்ளிக்கு அனுப்பியுள்ளேன். என் சத்து இருக்கும் வரை பிச்சை எடுத்தாவது அவ நினைத்ததை சாதிக்கும் வரை உறுதுணையாக இருப்பேன்" என்றார்.
 

யாமினிஅழகுமலர் அவரது கல்லூரி கால நண்பர்கள் அப்போதே பிறந்தநாள் உள்ளிட்ட எந்த நாட்களையும் கொண்டாட கூடாது. அதற்கு பதில் கல்வி மற்றும் சமூக வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என எடுத்த முடிவின்படி தற்போது நல்லவேலைகளில் இருப்பதால் இதுபோன்று கூட்டுமுயற்சியில் பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும்” - ஆளுநர் ரவி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
RN Ravi says it is wrong for parents not to allow their children to play sports

திருச்சி தேசிய கல்லுாரியில் விளையாட்டு வீரர்களின் 5 நாள் ஐ.சி.ஆர்.எஸ் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது.  கல்லுாரி செயலாளர் ரகுநாதன் தலைமையில் நடந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது, “விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அவர்கள் இந்த நாட்டின் சொத்துகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் அபினவ் பிந்த்ரா மட்டும் ஒரு தங்கப்பதக்கம் வென்ற போது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பதக்கம் மட்டும் வென்றது சற்று மன வருத்தத்தைத் தந்தது. 

2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. டில்லி விளையாட்டு கிராமத்தில் நடந்த விருந்தில் விஐபிக்கள் வரவில்லை என்பதற்காக வீரர்கள் சாப்பிடுவதற்கு 45 நிமிடங்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. இதுபோல வீரர்களை நடத்தக் கூடாது. பதக்கம் வென்றவர்களுக்கு அரசுகள் கோடிக்கணக்கில் பரிசு கொடுப்பதை போல விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த  பிட் இந்தியா திட்டத்தின் படி பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  தங்கள் குழந்தைகள் விளையாடினால் அதிக மதிப்பெண் பெற முடியாது என நினைத்து பெற்றோர்கள் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்காதது தவறாகும். பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும். விளையாட்டில் ஈடுபடுவதால் உடல், மன வலிமை, தலைமை பண்பு, கூட்டு முயற்சி போன்ற திறமைகள் உருவாகும். இந்த விளையாட்டு கருத்தரங்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டது சிறப்பாகும். வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு மருத்துவர்கள், பயோ மெக்கானிக் அனைவர்களும் இணைந்து செயல்பட்டால்தான் விளையாட்டில் சிறப்பு நிலைமை அடைய முடியும். ஓட்டப்பந்தயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மைக்ரோ வினாடியில் போட்டியில் முடிவைக் கணிக்க முடிகிறது. நுாற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்ட தேசியக் கல்லுாரிகளில் இது போன்ற விளையாட்டு கருத்தரங்கை அதிக அளவில் நடத்த வேண்டும்” என்றார். 

இந்தக் கருத்தரங்கில் 50 நாடுகளைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வல்லுநர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் ஆயுர்வேதம், போட்டிகளில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை, உணவு மேலாண்மை, உடற்பயிற்சி, யோகா,மருத்துவம், விளையாட்டு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், குறும்பட போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் ஒலிம்பியன் பாஸ்கரன், எக்ஸல் நிறுவன சேர்மன் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்கம் குறித்த அறிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசித்தார். முன்னதாக கல்லுாரி முதல்வர் குமார் வரவேற்றார்.

Next Story

“விளையாட்டுத்துறையில் தலைசிறந்த  மாநிலமாக தமிழகம் உள்ளது”-  அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
 Tamil Nadu is the best state in the field of sports says Minister I.Periyasamy

திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் பள்ளியில்  கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை முன்னிட்டு  மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியம், கட்டுரை, திருக்குறள், பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில்  வெற்றி பெற்ற 30 மாணவ-மாணவிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

இந்த விழாவில் உணவு மற்றும் வழங்கல்துறை  அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, “முதலமைச்சர் ஸ்டாலின்  சென்னையில் 180 உலக நாடுகள் கலந்து கொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திக் காட்டினார். அதே போல இளைஞர்  நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, தேசிய,  மாநில ஆசிய விளயாட்டு போட்டி மற்றும் பல்கலைக்கழக  விளையாட்டு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி  பெற்ற வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கி  சிறப்பித்து வருகிறார். இன்று சென்னையில் தொடங்கும் கேலோ  இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்  கொள்கிறேன்” என்றார்.

 Tamil Nadu is the best state in the field of sports says Minister I.Periyasamy

இறுதியாக பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  ஐ.பெரியசாமி பேசும்போது, “சென்னை, மதுரை, திருச்சி, கோவை  ஆகிய நகரங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெற  உள்ளது. தமிழகத்தில் கல்விக்கு மட்டுமின்றி விளையாட்டுத்துறைக்கும்,  முதலமைச்சர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். விளையாட்டுத்துறையில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கால்பந்து, கபடி போட்டிகளில் மிக சிறந்த மாணவர்கள் உள்ளனர். விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ள  மாணவர்கள் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று நமது  மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்” என கூறினார்.

இதில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை  வகித்தார். மாவட்ட எஸ்பி. பிரதீப், பழனி சட்டமன்ற உறுப்பினரும்,  கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகர மேயர்  இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநில வர்த்தகர் அணி இணைச்  செயலாளர் ஜெயன், திண்டுக்கல் வடக்கு ஒன்றிய செயலாளர்   நெடுஞ்செழியன், திண்டுக்கல் மாநகர பகுதி செயலாளர்களான  ராஜேந்திரகுமார், ஜானகிராமன்,  சந்திரசேகர் உள்பட கட்சிப்பொறுப்பாளர்களும், அதிகாரிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.