Skip to main content

வாழ்விழந்த மேடை அமைப்பாளர்கள்... துன்ப நிலையை கூற பூங்கொத்து...!

Published on 05/06/2020 | Edited on 05/06/2020
Bouquet of misery


இந்த கரோனா காலம் ஏற்றுமதி முதல் சிறு, குறு என எல்லா தொழில்களையும் முடக்க வைத்து விட்டது. ஒரு திருமணம், திருமண மண்டபத்தில் நடந்தால் பந்தல் அமைப்பவர் முதல், நாதஸ்வரம், சமையல் கலைஞர்கள், கேமராமேன், லைட் செட், மண அறை செட் அமைப்பவர்கள் என இந்த தொழில் சார்ந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு ஒவ்வொரு திருமண வசதிப்படி இருக்கும். இப்போது அரசு உத்தரவுப்படி எதுவும் இல்லை. இத்தொழில் புரிவோர் கடந்த 70 நாட்களாக வருவாய் இன்றி பரிதாப நிலையில் உள்ளார்கள்.


ஈரோட்டில் இன்று அத்தொழில்களில் ஈடுபடுவோர் தாலுகா அலுவலகம் வந்து பொதுமக்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் திருமணம் சார்ந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதை மக்களிடம் வலியுறுத்தினார்கள். அவர்கள் அமைப்பான தமிழ்நாடு டெணட் டீலர்ஸ் அண்ட் டெக்ரேடர்ஸ் நலச்சங்கத்தினர் மக்களுக்கு இலவசமாக பூக்கள் கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். என்ன செய்வது பிழைக்க வழி விடுங்கள் என அரசிடம் கேட்டால் கரோனா... கரோனா... என்று அபயக்குரலை கொடுக்கிறது. ஆகவே தான் மக்களுக்கு மகிழ்ச்சி என்கிற பூங்கொத்து கொடுத்து எங்கள் துன்ப நிலையை கூறுகிறோம் என்றார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.