Skip to main content

வித்தியாசமான முறையில் கடத்தப்பட்ட மது பாட்டில்கள்.. மடக்கிப் பிடித்த காவல்துறை! 

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

Bottles of liquor smuggled in a strange way .. police caught two

 

புதுச்சேரியிலிருந்து, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மது கடத்தல் நடைபெற்று வருகிறது. போலீசார், வாகன சோதனை மூலம் அதனைத் தடுத்தும், கடத்தப்படும் மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தும் வருகிறார்கள். அப்படி நேற்று காலை 6 மணி அளவில் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை வித்தியாசமான முறையில் கடத்தி வந்த 2 பேரை விழுப்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

விழுப்புரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் மதுர பாக்கம் சோதனைச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது விவசாயப் பணிக்காகப் பயன்படுத்தப்படும் டிராக்டர் டிப்பர் ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த டிராக்டரை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். டிராக்டர், அடிப் பகுதியில் யாருக்கும் தெரியாத அளவில் 40 பெட்டிகளில் 1,920 மதுபாட்டில்கள் புதுச்சேரியிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

 

மேலும், அந்த வழியாக வந்த மற்றொரு செவர்லெட் காரை சோதனை செய்ததில், அந்த காரில் 432 மதுபாட்டில்கள் புதுச்சேரியிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. டிராக்டர் டிப்பர் மற்றும் கார் ஆகியவற்றிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், விஸ்வரெட்டி பாளையத்தைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் முரளி, கார் டிரைவர் செட்டிப்பட்டு ஐயனார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். டிராக்டர் உரிமையாளர் சிவக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா பார்வையிட்டார். மேலும், மடக்கிப்பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஒயின் ஷாப்புகளில் அதிகவிலை! ஆத்திரத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிச்சென்ற பொதுமக்கள்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

தெலங்கானாவில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி, நான்கு ஒயின் ஷாப்புகளை முற்றுகையிட்ட பொதுமக்கள், கடைகளில் இருந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளிச்சென்றனர். தெலங்கானா, பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், தெகுலப்பள்ளியில் MRP விலையைவிட ரூ.20 முதல் ரூ.30 வரை அதிக விலைக்கு, மது விற்பனையாளர்கள் சிண்டிகேட் அமைத்து மது விற்பதாக  மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுக்கடைகள் முன்பு திரண்டு, நான்கு ஒயின்ஷாப்புகளில்  இருந்த  மதுபானங்களை அள்ளிச் சென்றனர். பொது மக்கள் பலரும் மது பாட்டில்களை அள்ளிச்சென்ற நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் மதுபாட்டில்களை எடுத்துச்சென்றனர். இதனை ஊழியர்கள் தடுக்க முயன்றும் முடியாததால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

இச்சம்பவத்தின்போது, பெரும்பாலும் பெண்களே மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். இதனையடுத்து, டிஎஸ்பி சந்திரபானு தலைமையில் அங்கு வந்த காவல்துறையினர், கடை உரிமையாளர்களின் புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.  மொத்தத்தில் சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பொது மக்கள் அள்ளிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.