Skip to main content

கரோனா பரிசோதனை மேற்கொண்ட பூத் ஏஜெண்டுகள்..! (படங்கள்)

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து மே 2ஆம் தேதி அன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில், கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகமாக இருப்பதால் வாக்கு எண்ணும் மையத்திற்குச் செல்ல வேண்டிய அனைத்து கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளும் கரோனா பரிசோதனை நிச்சயமாக மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதனைக் கருத்தில்கொண்டு இன்று (28.04.2021) மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக்கட்சி பூத் ஏஜெண்டுகளுக்கும் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் மயிலாப்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகாலட்சுமி கரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்