Skip to main content

புத்தக திருவிழா: நக்கீரன் ஸ்டாலில் வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை எடுத்து பார்த்த நீதிபதி!

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

 

Book Festival: The district collector saw the book kept at the Nakiran stall!


கடந்த எட்டு வருடங்களாக திண்டுக்கல்லில் இலக்கிய களம் சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து, இந்த வருடம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஒன்பதாவது புத்தக திருவிழா திண்டுக்கல் டட்லி பள்ளி மைதானத்தில் தொடங்கியிருக்கிறது.

 

மாவட்ட நிர்வாகமும், இலக்கிய களமும் இணைந்து புத்தகத் திருவிழாவை அக்டோபர் 6- ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 16- ஆம் தேதி வரை நடத்த இருக்கிறது. இந்த புத்தகத் திருவிழாவில் நக்கீரன் பதிப்பகம் உள்பட 60- க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் மூலம் 122 புத்தக ஸ்டால்கள் போடப்பட்டிருக்கிறது. இதில் 93- வது ஸ்டாலாக நக்கீரனும் இருக்கிறது. இந்த புத்தகத் திருவிழாவை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஸ்ரீமதி திறந்து வைத்தார். அதன் பின் புத்தகத் திருவிழாவில் உள்ள பல புத்தக ஸ்டால்களுக்கு சென்று அங்குள்ள புத்தகங்களை பார்வையிட்டு படித்தும் பார்த்தார். 

Book Festival: The district collector saw the book kept at the Nakiran stall!

அந்த வகையில், நமது நக்கீரன் ஸ்டாலில் வைக்கப்பட்டிருந்த 'பொன்னின் செல்வன்' புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். அதை எடுத்து பார்த்தவர், தற்பொழுது தான் பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது, அதற்குள் அந்தப் படத்தில் நடித்துள்ள நடிகைகளை அட்டை படத்தில் போட்டு இருக்கிறார்கள் என்று உடன் வந்த மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் பெருமையாக பேசி இருக்கிறார். ஊடங்களிலும், உள்ளூர் சேனல்களிலும் நமது நக்கீரனின் 'பொன்னின் செல்வன்' நூல் நடிகைகளின் படத்துடன் இருப்பதை மக்களுக்கும், வாசகர்களுக்கும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து ஸ்டாலுக்கு வந்த மக்களும், வாசகர்களும் கூட பொன்னியின் செல்வன் புத்தகத்தை ஆவலுடன் வாங்கிச் சென்றனர். அந்த அளவுக்கு பொன்னின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா, திரிஷா நடிகைகளின் படம் போட்ட பொன்னியன் செல்வன் புத்தகம் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

 

விழாவில் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, "நான் சிறுவயதில் இருந்தபோது புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. கையில் பணம் கொடுத்தாலே புத்தகத்தை வாங்குவதற்கு மனம் விரும்பும். என் வீட்டில் புத்தகங்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. திருமணத்திற்கு முன்பு என் அம்மா திருமண சீதனமாக புத்தகம் தான் தரப்போகிறேன் என்று கூறினார்; சரி என்று சம்மதித்தேன். என் கணவருக்கும் புத்தகம் படிப்பதில் விருப்பம் இருந்தது. எனக்கு மகிழ்ச்சியே அளித்தது. பிறந்த வீட்டு சீதனமும், புகுந்த வீட்டு சீதனமும் எனக்கு புத்தகம் தான். இந்த கண்காட்சியை பார்க்கின்ற பொழுது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. புத்தகத்தை படிக்க படிக்க ஆர்வம் அதிகரிக்கிறது" எனத் தெரிவித்தார். 

Book Festival: The district collector saw the book kept at the Nakiran stall!

 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விசாகன், இலக்கிய களம் தலைவர் மனோகரன், இலக்கிய களம் செயலாளர் கண்ணன், கூடுதல் ஆட்சியர் தினேஷ் குமார். மாவட்ட காவல்துறை எஸ்.பி.பாஸ்கரன், டி.ஆர்.ஓ.லதா, ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் அருண்மணி, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகளும், இலக்கிய களம் பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.