Skip to main content

வாகன சோதனையில் காவல்துறையினர் அத்துமீறல்! - இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு எலும்பு முறிவு!

Published on 12/09/2018 | Edited on 12/09/2018
Vehicle inspection


காவல்துறையினரின் அத்துமீறிய வாகன சோதனையின் போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் சம்பந்தபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்யகோரி சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமாராட்சி காவல் நிலைய எல்லலைக்குட்பட்ட வீரநத்தம் என்ற இடத்தில் குமராட்சி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காட்டுமன்னார்கோவிலை அடுத்த வீராண நல்லூர் கிரமத்தை சேர்ந்த குணசேகரன், பொன்னம்பலம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது வாகனத்தை சோதனை செய்து கொண்டிருந்த காவலர்கள் இவர்கள் வாகனத்தை நிறுத்துவற்குள், வண்டியை ஓட்டிவந்தவரின் கையை பிடித்து இழுத்துள்ளார்.

இதில் வாகனத்தில் வந்த இருவரும், அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் கீழே விழுந்ததில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயம் பட்டவர்களில் ஒருவருக்கு பலத்த எலும்பு முறிவும், மற்றொருவருக்கு அடி பலமாக பட்டதில் காதில் இருந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. மேலும் காதில் இருந்து ரத்தம் வந்தவருக்கு மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

Vehicle inspection


இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கட்சியின் காட்டுமன்னார்கோயில் வட்டசெயலாளர் இளங்கோ மற்றும் கட்சியினர் சம்பவத்தை அறிந்து காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரித்துக் கொண்டு இருக்கையில், அப்போது அங்கு இருந்த குமராட்சி காவலர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள முதல் தகவல் அறிக்கை ரசீதை மருத்துவர் அனுமதி இல்லாமல் கிழித்து விட்டு சென்றார்.
 

Vehicle inspection


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விதோச மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் திங்கள் இரவு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் ஷீயாம்சுந்தர் சம்பந்தபட்ட காவலர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி கூறினார். இதனை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக இரவு நேரத்தில் விளக்கிகொள்ளப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய் காலை சம்பந்தபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் விபத்துக்குள்ளானவர்களின் உறவினர்கள் குமராட்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவது குறித்து காவல்துறை ஆய்வாளர் சரியான பதில் கூறாமல் மழுப்பலாக பேசியுள்ளார். பின்னர் ஆய்வாளரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.