Advertisment

முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Mullaiperiyaru dam!

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைத்துள்ளது கர்னல் பென்னிகுவிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை. முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு திருச்சூரில் இருந்து மர்ம நபர் ஒருவர் ஃபோன் கால் செய்துள்ளார்.

Advertisment

அவர் முல்லைப் பெரியாறு அணையைத் தகர்க்க வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விட்டதைத் தொடர்ந்து அணையில் ஆய்வு செய்ததில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் மிரட்டலை அடுத்து, கேரளா டிஎஸ்பி நத்தம்பிள்ளை தலைமையில் 20 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.தென் மாவட்டத்தில் ஏற்பட்ட பஞ்சம், வறட்சியைமனதில் வைத்து அதற்குத் தீர்வாக பென்னிகுவிக் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Kerala Tamilnadu mullai periyaru dam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe