Advertisment

கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல்... விசாரணையில் வெளியான தகவல்!

Bomb threat to Coimbatore ... Information released during the investigation!

கோவை இரயில் நிலையத்திற்குநேற்று (16.07.2021) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம்அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர்ஒருவரிடம் இருந்துவந்த வெடிகுண்டு மிரட்டலைத்தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் கோவை இரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisment

கோவை மாவட்டம், துடியலூர் வடமதுரையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காவல் கட்டுப்பாட்டுஅறையைத் தொடர்புகொண்டுபேசியுள்ளார். அதில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கோவை ரயில் நிலையத்தில் குண்டு வைப்பதுகுறித்துப் பேசிக்கொண்டிருப்பதாககூறியுள்ளார். இதனால் அதிர்ந்தபோலீசார், மோப்பநாய்மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன் கோவை இரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால், சோதனையின் இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என தெரியவந்தது. இதன்பின்னர்காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு பேசிய செந்தில்குமாரை கைது செய்து விசாரித்ததில், கரோனாகாரணமாக மனைவி உயிரிழந்ததால் மனநலம் பாதிக்கப்பட்ட செந்தில்குமார் இவ்வாறு தெரிவித்தது தெரியவந்தது.

Advertisment

bomb threat Investigation kovai police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe