Skip to main content

வீட்டில் வெடி குண்டு வீச்சு... அதிர்ச்சியில் திரண்ட கிராம மக்கள்!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

Bomb blast at home ... Villagers gather in shock

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது பள்ளிப்பட்டு எனும் ஊர். இந்த ஊரில் உள்ள பெரிய காலனியில் உள்ள அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் எப்போதும் போல நேற்று முன்தினம் திருவிழா தொடங்கியுள்ளது. இந்தச் சமயத்தில் புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டைச் சேர்ந்த பென்னரசு என்பவரது தாத்தா-பாட்டி வீடு அந்த ஊரில் உள்ளது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முரசொலி மாறன் அவரது அண்ணன் மாதவன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் தென்னரசு தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு மேற்படி இருவரையும் தீர்த்துக் கட்டுவதற்கு திட்டமிட்டு பள்ளிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் முரசொலி மாறன், மாதவன் ஆகியோர்களிடமிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த தென்னரசு அவரது கூட்டாளிகள் மாதவன், முரசொலி மாறன் கிடைக்காத ஆத்திரத்தில் தாங்கள் கொண்டு வந்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை நேற்று முன்தினம் இரவு முரசொலி மாறனின் வீட்டில் வீசியுள்ளனர்.

 

அது பயங்கரமாக வெடித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் திரளாகக் கூடி வெடிகுண்டு வீசியவர்களைத் தேடியுள்ளனர். அதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு ஊர் மக்கள் தரப்பில் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப் இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் முரசொலி மாறன் வீட்டில் வீசிய வெடிகுண்டு தரவுகளை சேகரித்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

மேலும் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய பென்னரசு அவரது கூட்டாளிகள் அஜித் ராஜ், முகமது அஜித், சிவா . உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 6 கத்திகள், இரண்டு இருசக்கர வாகனம், ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேற்படி உள்ள நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைத்துள்ளனர். ஏற்கனவே தென்னரசு மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கண்டமங்கலம் அருகே கோவில் திருவிழாவின்போது வெடிகுண்டு வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.