Advertisment

கரை ஒதுங்கிய இளைஞரின் சடலம் - காவல்துறை தீவிர விசாரணை

The body of a young man stranded on the shore! Police Intensive Investigation!

கடலூர் மாவட்டம், சாமியார்பேட்டை கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இறந்த நிலையில் ஒரு இளைஞரின் உடல் கரை ஒதுங்கியிருப்பதாக புதுச்சத்திரம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, புதுச்சத்திரம் காவல்துறையினர் அந்தக் கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு, ஒரு ஆணின் உடல் கரை ஒதுங்கியிருந்தது. உடனடியாக அந்த உடலை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், அந்த உடலின் இடது கையில் சிலகாயங்கள் இருந்துள்ளன. அதனைத் தொடர்ந்து அந்த உடலை மீட்ட காவல்துறையினர், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisment

இறந்தவர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இறந்தவர் மதன்குமார் (26) என்பதும், இவர் சிதம்பரம் அருகே பூவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இவர், கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். சனிக்கிழமை இரவு பணிக்கு சென்ற இவர், ஞாயிற்றுக்கிழமை காலை கடற்கரையில் இறந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளார். இவர், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து கடலில் வீசப்பட்டாரா என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisment

police Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe