சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றுகாலமானார். தற்போது அவரது உடலானதுசென்னை அரசுஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது.
ஜீவஜோதி கணவர் பிரான்சிஸ் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில், ராஜகோபாலுக்கு வழங்கப்பட்டஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார் ராஜகோபால்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280],
[300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService
(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால்ராஜகோபாலின்உடல்நிலை மோசமடைததால் அவர் அரசு ஸ்டான்லி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.ஆனால் அங்கே மருத்துவ வசதிகள் சரியாக இல்லை எனவே தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற அனுமதிக்கோரிஅவரது மகன் சரவணன்மனுதாக்கல் செய்திருந்தார்.
தற்போதைய நிலையில் அவரைஇடமாற்றுவது சிக்கலானது எனஸ்டான்லி மருத்துவமனைஅறிக்கை விடுத்த நிலையில் அதற்கு தான் முழு பொறுப்பேற்பதாக ராஜகோபால் மகன் தரப்பு கூற, ராஜகோபால்தனியார் மருத்துவமனையில்சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதியளித்தது. அதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு வடபழனியில் உள்ளஒருதனியார் மருத்துவமனையில்சிகிச்சை நடைபெற்றுவந்த நிலையில் அவர் இன்று காலமானார்.
இந்நிலையில் அவர் தண்டனை கைதி என்பதால் அவரதுஉடலானது சென்னை அரசுஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவர் உடல் பிரதாபரிசோதனை செய்யப்பட இருக்கிறது. அதன்பிறகுதான் அவரது உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். கேகே.நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை வரை அவரது உடல் வைக்கப்பட்டு பின்னர் அவரது உடல் சொந்தஊரானதிருச்செந்தூர் கொண்டு செல்லப்படுகிறது. அங்குபுன்னைநகரில் உள்ள சொந்தகிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாளைஅங்கு இறுதிச்சடங்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.