Advertisment

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Advertisment

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி உயிரிழந்தவர்களின் 7 பேரின் உடல்கள் நேற்று மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. உடற்கூறாய்வு செய்த 7 பேரில் இதுவரை 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Advertisment

மேலும் 2 பேரின் உடல்கள் இன்று மாலை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். அவர்களின் கோரிக்கைகள் பேச்சுவார்த்தையின் மூலம் பேசி தீர்க்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதி திருப்பியுள்ளதால் 100 சதவீதம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார்.

Thoothukudi Sterlite
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe