Skip to main content

கோடியக்கரையில் ஒதுங்கிய படகு; போலந்து நாட்டை சேர்ந்த ஒருவரிடம் விசாரணை

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

rr

 

கோடியக்கரை கடற்பகுதியில் அவசரக் காலத்தில் பயன்படுத்தப்படும் துடுப்புகளுடன் கூடிய ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியதைக் கண்ட மீனவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் போலந்து நாட்டை சேர்ந்த ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, கோடியக்காடு கடற்பகுதி வழியாக கடத்தல் நடப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. ஆரம்பத்தில் தங்கம் கடத்தல் ஜரூராக இருந்து வந்தது. தற்போது தங்கம் கடத்தல் குறைந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தலே அதிகமாக நடந்து வருகிறது. 

 

இதற்கிடையில் இலங்கையில் இருந்து கள்ளத்தோனி மூலம் தமிழகம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும்போது ஆங்காங்கே பிடிபட்டு சிறையில் அடைபடுவதைக் கண்டு அப்படிப்பட்ட சம்பவங்களும் குறைந்துள்ளன.

 

இந்த நிலையில் ஆளில்லா ரப்பர் படகு ஒன்று கோடியக்காட்டு கடற்பகுதியில் கரை ஒதுங்கியது. அதில் வந்தவர்கள் வனப்பகுதிக்குள் பதுங்கியிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் வனப்பகுதிக்குள் மோப்பநாய் மற்றும் ட்ரோன் மூலம் தேடுதல் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆறுகாட்டுதுறை கடற்கரை வழியே மக்கள் வசிக்கும் பகுதிக்குள் ஒரு நபர் செல்லுவதை கண்டுபிடித்து மீனவர்கள் உதவியோடு போலீசார் அவரை கைது செய்தனர்.


அவரிடம் நடத்திய விசாரணையில், போலந்து நாட்டை சேர்ந்த வாத்தீஸ்வாப் என தெரியவந்தது. கடந்த 2019 இலங்கை சுற்றுலா விசாவில் வந்த அவர், அங்கு சிலரிடம் மோதல் ஏற்பட்டு  பாஸ்போர்ட் மற்றும் விசாவை முடக்கப்பட்டு சிறையில் இருந்தவர். பின்னர் வெளியே வந்ததும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சொந்த நாடு திரும்ப முடியாத நிலையில் மீண்டும் பல்வேறு வழக்குகள் பதிவாகி மீண்டும் சிறைக்கு சென்று வெளியே வந்துள்ளது தெரியவந்தது. மேலும், இந்தியா வழியாக சொந்த நாட்டுக்கு திரும்பும் எண்ணத்துடன் ஒரு லட்சம் கொடுத்து ரப்பர் படகுவங்கி, செல்போன் சிக்னல் மூலம் வந்ததாக போலீசாரிடம் வாத்தீஸ்வாப் தெரிவித்துள்ளார்.


மேலும், தன்னை புதுடில்லியில் உள்ள தூதரகத்தில் ஒப்படைக்குமாறு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.