பிச்சவாரத்தில் படகு சவாரி ரத்து; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Boat ride canceled in Bichhiwara due to rain

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் உள்ள சதுப்பு நில காடுகளுக்கு இடையே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதி ஆகிய இரு தினங்களுக்கு பிச்சாவரம் படகு இல்லத்தில் பயணிகளுக்கு அனுமதி இல்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். எனவே சுற்றுலாப் பயணிகள் பிச்சவாரத்திற்கு வந்து படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

collector rain
இதையும் படியுங்கள்
Subscribe