Skip to main content

அந்தமானுக்கு செல்லும் படகில் போதை பொருளா? சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை 

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அண்ணங்கோவில் மீன்பிடி இறக்கு தளத்தில் இருந்து அந்தமானுக்கு செல்ல தயாரக இருந்த படகில் உப்பு மூட்டைகளை ஏற்றியுள்ளனர் ஆனால் ஏற்றப்பட்டவை போதை பொருட்கள் என அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் கொடுத்தின் பேரில்  சுங்கதுறை மற்றும்  கடலோர கவால் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

 

Is the boat going to Andaman intoxicated? Customs officials raided


பரங்கிப்பேட்டை அண்ணங்கோவில் மீன்பிடி இறக்கு தளத்தில் இருந்து  படகு ஒன்று அந்தமானுக்கு புறப்பட  தயாராக இருந்தது. இந்த படகில்  மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்தன. இதனை பார்த்த மீனவர்கள் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக கடலூர் கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்ற கடலூர் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் சங்கீதா,உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் போலீஸார் சென்று படகை நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் சிறுபாலைகுடி கிராமத்தைச் சேர்ந்த நீதி மன்னன் அவரது சகோதரர் துரைசெல்வத்திற்காக புதுச்சேரி சென்று பழைய படகு ஒன்றை வாங்கி, அந்த படகை நாகை மாவட்டத்தில் உள்ள பழையார் மீன்பிடி துறைமுகத்தில் பழுது நீக்கி படகு ஆடாமல் கடலில் செல்வதற்காக அந்த படகில்  நேற்று காலை அண்ணங்கோவிலில் 10 டன் உப்பு மூட்டை மற்றும் மரக்கட்டைகளை  ஏற்றிக்கொண்டு அந்தமான் செல்வதாக தெரிய வந்தது.

 

Is the boat going to Andaman intoxicated? Customs officials raided

 

இதனையொடுத்து கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் இதுகுறித்து கடலூர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு சென்ற சுங்கத்துறை அதிகாரி  நீதி மன்னன் உள்ளிட்ட  படகில்  இருந்த சிலரிடம் விசாரணை செய்தனர். பின்னர் படகில் இருந்த உப்புமூட்டையிலிருந்து உப்பு மாதிரிகளை ஆய்வகத்தில் பரிசோதனை செய்வதற்காக எடுத்துக்கொண்டு, நீதிமன்னனிடம் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அண்ணங்கோவில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.