Advertisment

படகு கவிழ்ந்து விபத்து; மீனவர்களை மீட்பதில் சிக்கல்?

Boat capsizing incidentTrouble rescuing fishermen

Advertisment

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக புயல் சின்னம் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது. மேலும் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை மறுநாள் (30.11.2024) கரையைக் கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதே சமயம் கனமழை காரணமாக புதுச்சேசி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (28.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரிலுள்ள தனியார் பள்ளி, பழையங்குடி ஊராட்சியிலுள்ள இளவரசநல்லூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குப் பொதுமக்கள் தங்கியிருப்பதால், இந்த இரு பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது என்றும், மறு அறிவிப்பு வரும் வரை படகுகளைக்கடற்கரையில் நிறுத்த வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் கடலூர் மாவட்டம் தையல் தோணித்துறை என்ற மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் இரண்டு பைபர் படகில் நேற்று (27.11.2024) கடலுக்குச் சென்றனர். அப்போது கடல் சீற்றம் காரணமாகவும், காற்றின் வேகம் காரணமாகவும் படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து கடலில் தத்தளித்த மீனவர்கள் தனியார் தொழிற்சாலைக்கான கப்பல் இறங்கு தளத்தில் ஏறி உயிர் தப்பினர்.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை அங்கிருந்து மீட்கும் முயற்சியில் இரண்டாவது நாளாக இன்று (28.11.2024) ஈடுபட்டுள்ளனர். மேலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களை மீட்பதில் சிக்கல் நீடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்களின் பைபர் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே தனியார் கப்பல் இறங்கு தளத்தில் மீனவர்களுக்குத் தேவையான உணவு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Boat Cuddalore fisherman
இதையும் படியுங்கள்
Subscribe