Skip to main content

கொடைக் குருதியில் நோய்த் தொற்று-கொடையாளியைத் தேடிய அரசு மருத்துவமனை நிர்வாகம்

Published on 30/12/2018 | Edited on 30/12/2018

 

கல்லூரி மாணவர்களிடையே சமூக அக்கரையை மேம்படுத்தும் வகையில் கடந்த மாதம் விருதுநகரில் அரசு மருத்துவமனை சார்பில் கல்லூரி மாணவர்களின் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் சுமார் 300 பேர்களும், அதன் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள் 150 பேர்கள் என்று மொத்தம் 450 மாணவர்கள் தங்களின் குருதியைக் கொடையாகக் கொடுத்திருக்கிறார்கள்.

 

bl

 

முறைப்படி ரத்தம் பெறுவதற்கு முன்பு அந்த மாணவனின் ரத்தம் எந்த வகை குரூப்பைச் சேர்ந்தது என்று சோதனை செய்யாமல், அவர்களிடமிருந்து ரத்த நன்கொடை பெற்ற அரசு மருத்துவமனை நிர்வாகம், மாணவர்களிடமிருந்து அவனது பிளட் குரூப், பெயரை மட்டுமே பெற்றுக் கொண்டு அவர்களது ரத்தங்களை அரசு பிளட் பேங்க்கில் வைத்திருக்கிறது. இதே போன்று தான் அனைத்து மாணவர்களிடமிருந்தே விபரங்கள் பெறப்பட்டிருக்கிறது. தவிர மாணவர்கள் குருதிக் கொடை கொடுத்ததற்கு மொத்தமாக, சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்குச் சான்றிதழையும் கொடுத்திருக்கிறது அரசு மருத்துவமனை நிர்வாகம். தற்போது சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தம் செலுத்தப்பட்டதில் எச்.ஐ.வி. வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு தேசமே பிரளயப்பட்டுப் போய்க்கிடக்க, அவசர அவசரமாக விருதுநகர் அரசு மருத்துவமனை நிர்வாகம், நன்கொடை தரப்பட்ட ரத்தங்களைச் சோதித்திருக்கிறது. அதில் அண்மையில் கல்லூரி மாணவர்களிடம் பெறப்பட்ட ரத்தத்தில் ஒரு மாணவனின் ரத்தத்தில் ஹெப்படைட்டிஸ் வைரஸ் தொற்றான மஞ்சள் காமாலையின் தாக்கமிருப்பதைக் கண்டு அதிர்ந்து சிகிச்சைக்காக அந்த மாணவனைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம் முடியவில்லையாம்.

 

 சுபாஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) என்ற அந்த மாணவன் ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர்ச் சாலையிலிருக்கும் கிராமத்தைச் சார்ந்தவனாம். தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் பலமுறை கல்லூரியைத் தொடர்பு கொண்ட பிறகே மாணவன் தொடர்பான விஷயத்தைத் தெரியப்படுத்தியிருக்கிறது.

 

இந்த விஷயம் கல்லூரி மட்டத்தில் பரவிய அடுத்த கணம், கல்லூரி பேராசிரியர் ஒருவர், அந்த மாணவனை அழைத்து விஷயத்தைப் பக்குவமாகத் தெரியப்படுத்தி உடனடியாக சிகிச்சை எடுக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார். தற்போது அந்த மாணவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறாராம்.

 

தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்த கதை தான்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்த பிளேட்லெட்க்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ்-தனியார் மருத்துவமனைக்கு சீல்

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

 Chathukudi Juice-Private Hospital Seal for Blood Platelet Replacement

 

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு ரத்த பிளேட்லெட்க்கு பதிலாக பழச்சாறு ஏற்றியதாக தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் உத்திர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

 

உத்திரபிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜில் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட  32 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அதனால் அவருக்கு உடனடியாக பிளேட்லெட் செலுத்த வேண்டும் எனவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 Chathukudi Juice-Private Hospital Seal for Blood Platelet Replacement

 

அதனைத் தொடர்ந்து நோயாளிக்கு பிளேட்லெட் ஏற்றப்பட்டது. பின்னர் வேறு ஒரு மருத்துவமனைக்கு அந்த நபர் மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்தார்.  பிளேட்லெட்க்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை ஏற்றியதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் வீடியோ வெளியிட்ட நிலையில்,  துணை முதல்வரின் உத்தரவின் பேரில் அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்து விட்டு சென்றனர்.

 

 

Next Story

வெட்டியது யார் ? வெட்டுப்பட்டது யார் ?குழப்பத்தில் போலிஸார்

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

 

திருவண்ணாமலை நகரில் கிரிவலப்பாதையில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் நுழைவாயிலில் நின்றிருந்த ஒருவரை ஒரு கும்பல் அருவா மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளது. 

 

ப்

 

இதனைப்பார்த்து அங்கிருந்த கடைக்காரர்களும், அந்த வழியாக சென்ற பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர். 

 

வெட்டி கொலை செய்யப்பட்டவரின் உடல், ரத்த வெள்ளத்தில் கிடந்ததை ஒரு கும்பல் காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இதுதொடர்பாக இதுவரை யாரும் புகார் செய்யவில்லை எனக்கூறப்படுகிறது. 

 

இந்த தகவல் தெரிந்த திருவண்ணாமலை நகர காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. வெட்டப்பட்டது யார், வெட்டியது எந்த கும்பல், எதற்காக வெட்டியது என சம்பவயிடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்த விவகாரம் திருவண்ணாமலை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.