Skip to main content

உள்ளூர் பால் விற்பனையை நிறுத்தியதால் பால் கொள்முதல் நிலையம் முற்றுகை

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

Blockage of milk purchase station as local milk sale stopped.

 

கிராமங்களில் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலை ஆவின் கொள்முதல் செய்யும் போது, உள்ளூரில் சில்லரை விற்பனை செய்ய அரசு தடை செய்திருப்பதை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முற்றுகையிடப்பட்டது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் கடந்த 48 ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. கீரமங்கலத்தைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பால் உள்ளூரில் வீடுகள், கடைகளுக்கு விற்பனை செய்தது போக மீதமுள்ள பாலை ஆவின் கொள்முதலுக்கு அனுப்புகின்றனர். கீரமங்கத்தில் தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 2 ஆயிரம் லிட்டர் வரை கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 70% வரை உள்ளூரில் விற்பனையாகிறது.

 

ஆனால், கடந்த டிசம்பர் முதல் தேதியிலிருந்து கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலில் 10% மட்டுமே உள்ளூரில் விற்பனை செய்ய வேண்டும் மீதமுள்ள 90% பாலை ஆவினுக்கு அனுப்ப வேண்டும். மீறினால் கூட்டுறவு சங்க செயலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

Blockage of milk purchase station as local milk sale stopped.

 

இதனால் அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலும் உள்ளூர் பால் விற்பனையை நிறுத்தியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அதே போல கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ளூர் விற்பனையை நிறுத்தியதால் பால் வாங்க காத்திருந்த பொதுமக்கள், தேநீர் கடைக்காரர்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.

 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் புதுக்கோட்டை ஆவின் எஸ்.ஒ திருப்பதி, மற்றும் கீரமங்கலம் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வீடுகளுக்கு பால் விற்பனை செய்யலாம் என்றனர். ஆனால், கடைகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. ஆவினில் மாதாந்திர அட்டை போட்டு பாக்கெட் பால் வாங்கிக்கொள்ளட்டும் என்றனர் அதிகாரிகள்.

 

ஆனால், எங்கள் ஊரில் பாக்கெட் பாலில் டீக்கடை விற்பனை செய்ய முடியாது. எங்கள் ஊரில் உற்பத்தியாகும் பால் எங்களுக்கு வேண்டும் என்று அதிகாரியை முற்றுகையிட்டனர். அதன் பிறகு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்த பிறகு சில்லரை விற்பனை செய்யப்பட்டது. இனிமேலும் உள்ளூர் விற்பனை செய்வதை நிறுத்தினால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இன்று பால் விற்பனை செய்யாததால் கீரமங்கலத்தில் 10-க்கும் மேற்பட்ட டீக்கடைகள் மூடப்பட்டிருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.