Skip to main content

சேலத்தில் வெளுத்து வாங்கியது மழை! வடகிழக்கு பருவம் இனிதே ஆரம்பம்!!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

வடகிழக்கு பருவமழையின் தொடக்கமே சேலத்திற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. நாள் முழுக்க சீரான இடைவெளியில் மழை பெய்து கொண்டிருந்தது.

தமிழகத்திற்கு போதிய நிலத்தடி நீர்த்தேவைக்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையே கைகொடுத்து வருகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழையும் நிகழாண்டில் தமிழகத்திற்கு ஓரளவு கைகொடுத்திருக்கிறது. இந்நிலையில், அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக். 20ம் தேதிவாக்கில் தொடங்கும்.

 

 Bleached Rain in Salem! Northeast season is just beginning !!

 

நிகழாண்டில் அக். 17ம் தேதியே வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரித்து இருந்தது. ஆனாலும், ஒரு நாள் முன்கூட்டியே அதாவது அக். 16ம் தேதியே (புதன்கிழமை) வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தமிழக கடலோரத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகம், புதுவையில் அடுத்த இரு நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இது ஒருபுறம் இருக்க, சேலத்தைப் பொருத்தவரை வடகிழக்குப் பருவமழை சிறப்பான தொடக்கத்தைத் தந்திருக்கிறது. புதன்கிழமை காலை முதலே சேலம் மாநகர பகுதிகள் மற்றும் உள்மாவட்டத்திலும் சில இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. மாநகரைப் பொருத்தவரை சீரான இடைவெளியில் மழை விட்டுவிட்டுப் பெய்து கொண்டிருந்தது.
 

சேலத்தில் சூரமங்கலம், நான்கு சாலை, அழகாபுரம், பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் மழை சீரான இடைவெளியில் பெய்தது.
 

நள்ளிரவு 12.45 மணியளவில் ஓரளவு கனமழை பெய்யத்தொடங்கியது. 45 நிமிடங்கள் வரை மழை நீடித்தது. பின்னர் லேசான தூறலாக பெய்து கொண்டிருந்தது. பருவமழைக்காலம் என்பதால் மழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. மழையால்  சேலத்தில் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.