Skip to main content

வெங்காய போண்டாவில் பிளேடு... அதிர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

 Blade in Onion Ponda ... Shocked Police Sub-Inspector!

 

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாங்கிய வெங்காய போண்டாவில் பிளேடு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

திண்டுக்கலில் உள்ள விளாம்பட்டி காவல் நிலையத்தில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கனகராஜ். இவர் தனது மகன் மற்றும் இரண்டு பேத்திகளுடன் விளாம்பட்டி போலீஸ் குடியிருப்பில், வசித்து வருகிறார். தனது பேத்திகளுக்காக நிலக்கோட்டை பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு கடையில் வடை, போண்டா வாங்குவது வழக்கம். அதன்படி, நேற்று காலை அந்தக் கடையில் ஐந்து வெங்காய போண்டாவை வாங்கியுள்ளார். பின்னர், அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று தனது பேத்திகளுக்குக் கொடுத்தார். ஒரு பேத்தி, போண்டாவை பிரித்துப் பார்த்தபோது அதிர்ந்து போனார். ஏனெனில், அந்த போண்டாவிற்குள் ஒரு முழு பிளேடு இருந்தது. உடனே, அந்தச் சிறுமி,  தனது தாத்தாவிடம் அந்த போண்டாவை காட்டியுள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கனகராஜ், உடனடியாகத் தனது மற்றொரு பேத்தியிடம் இருந்த போண்டாவையும் பிரித்துப் பார்த்தார். ஆனால், மற்ற போண்டாவில் அப்படி எதுவும் இல்லை.

 

இதுகுறித்து நிலக்கோட்டை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ரமேஷுக்கு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தகவல் தெரிவித்தார். அதன் பிறகு, அவர் போண்டா வாங்கிய கடைக்கு வந்த பாதுகாப்புத் துறை அதிகாரி ரமேஷ், கடையில் விசாரணை நடத்தினார். விசாரணையில், போண்டாவில் எப்படி பிளேடு இருந்தது என்று தனக்கு எதுவும் தெரியாது என போண்டாவை தயாரித்த ஊழியர் தெரிவித்தார். இதனையடுத்து, அஜாக்கிரதையாகச் செயல்பட்ட தொழிலாளியை உணவுப் பாதுகாப்புத் துறையினர் எச்சரித்தனர். 

 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, இதேபோல் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் குழந்தைக்கு வாங்கிய சாக்லேட்டில், 'பீடித் துண்டு' இருந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிலக்கோட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாங்கிய  போண்டாவில் பிளேடு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.